(Reading time: 18 - 35 minutes)

 

ருவரும் ஸ்கூலுக்கு வந்து சேர்ந்த பொழுது அங்கு அவர்களுக்காக அனு காத்திருந்தாள்.. “வாங்க அனு, என்ன நான்கைந்து நாட்களாய் ஆளையேக் காணோம்… எப்படி இருக்கிறீர்கள்??”

நல்லாயிருக்கேன் ஷன்வி… ஆமாப்பா, இன்னைக்கு சாயங்காலம் எங்க வீட்டில் சின்ன ஃஃபங்க்ஷன்.. அதற்கான ஏற்பாடுகளில் தான் நான்கைந்து நாட்களாய் மாட்டிக்கொண்டேன்… நீயும் ரிகாவும் கண்டிப்பாக வரணும்.. எனக்கு இந்த ஊட்டியில் தோழிகள் என்றால் அது நீயும் ரிகாவும் தான்.. சோ, கண்டிப்பாக வரணும்.. ரிகா சொன்னது உனக்கும் தான்,.. நீயும் கூட வரணும் சரியா??”

“அதற்கென்ன அனு நானும் அவளும் நிச்சயமாய் வருவோம்… நீங்க போய் ஃபங்க்ஷன் வேலையைப் பாருங்க... “

இந்த சிறிய இடைவெளியில் அனு அவர்களை வா, போ என்று அழைக்கப் பழகியிருந்தாள்… ஷன்வியும் அனு தங்களை விட வயதில் மூத்தவள் என்றும், அவளின் பெண்ணைப் பார்த்தப்பிறகே ரிகா முகத்தில் ஏதோ கொஞ்சம் சிரிப்பு வருகிறதென்ற காரணத்தினாலும் அனுவும் பழக நல்லவளாக இருப்பதினாலும் மறுப்பேதும் சொல்லத்தோன்றவில்லை ஷன்விக்கு…

“சரி ஷன்வி…. அபியை நான் இப்போ கூட்டிகிட்டுப் போகலாமா... லீவ் லெட்டர் எழுதி கொடுக்கவேண்டுமா?”

“ஆமா அனு இருங்க வரேன்…. “ என்று உள்ளே சென்றவள் ஒரு லீவ் லெட்டர் எடுத்து அனுவிடம் கொடுத்தாள்.. அதை நிரப்பி ஷன்வியிடம் ஒப்படைத்துவிட்டு, அபியை அழைத்து வந்தாள்..

“ஷன்வி மிஸ் ரிகா மிஸ்-ஐ கண்டிப்பாக கூட்டிகிட்டுவாங்க... டாட்டா”… என்று சொல்லியவளை தூக்கிக்கொண்டு அனு போய்விட்டாள்…    

விரைவில் வீடு திரும்பிய ஷன்வி, பாட்டியிடம் விவரத்தைக் கூறிவிட்டு ரிகாவை கிளம்ப சொல்லி விட்டு பார்ட்டிக்கு செல்லத் தயாரானாள்…

ந்த மாலை வேளையில் லேசாக இருள் படர்ந்து வந்துகொண்டிருந்த நேரம், அந்த விசாலமான பங்களாவிற்குள் ஷன்வியின் கார் நுழைந்தது.. சாதாரணமாக என்றால் ஸ்கூட்டி தான் அவளுக்குப் பிடிக்கும்… இதுபோன்ற பெரிய இடங்களுக்கு வரும்போது கார் தான் உபயோகப்படுத்துவாள்..

வானத்தில் மின்னிய நட்சத்திரங்களுக்குப் போட்டியாக அந்த பங்களா மின்னிக் கொண்டிருந்தது.. ஷன்வி அனு வசதியானவள் என்று அறிந்திருந்தாள் தான்… ஆனால் இவ்வளவு வசதியானவள் என்றெண்ணியிருக்கவில்லை… ரிகா அந்த அலங்காரங்களைப் பார்த்து லேசாக வியப்புக் காட்டினாளேத் தவிர வேறெதுவும் அவள் செய்யவில்லை…

காரிலிருந்து இறங்கியவர்களை அனு வேகமாக வந்து உற்சாகமாக வரவேற்றாள்… அவளுக்கு மிகுந்த சந்தோஷம்… அதை அவர்களிடத்தில் கூறினாள்….

“அனு இந்த சேலையில் நீங்க ரொம்ப அழகாக இருக்குறீங்க… “

“-------------“

“என்ன அனு எதுவும் பேசாமல் எங்களையேப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்…. என்ன விஷயம்???”

“இல்லை… இந்திரலோகத்து ரம்பையும் ஊர்வசியும் முதன்முதலில் பூலோகத்தில் பார்க்க நேர்ந்தால் வேறென்ன செய்வது??? “

“அடடா... அதை இந்திராணி தாங்கள் சொல்வது தான் எனக்கு ஆச்சர்யமாய் உள்ளது... “

“ஐய்யோ, ஷன்வி-ரிகா நிஜமாகவே நீங்கள் இருவரும் இன்று மிக அழகாக இருக்கின்றீர்கள்”

“நீங்களும் ராணியாரே…. “

“………………………………………”

“என்ன அனு இப்படி வைத்த கண் வாங்காமல் பார்க்குறீங்க..?.. இது நம்ம ரிகா தான்… பேயோ பிசாசோ பூதமோ இல்லை…”

செல்லமாக அவளை அடித்த அனு, “இல்லை ஷன்வி, சாதரணமாக ரிகாவை சுடிதாரில் பார்ப்பதற்கும், இன்று இந்த உடையில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம்…”

“உண்மை தான் அனு, உங்களைப் போலவே அவளும் கலக்குகிறாள் இன்று… ஹா ஹா ஹா.”

“உன்னை……. ஆமாம் ஊர்வசி… உங்களை விட கொஞ்சம் குறைவு தான் நாங்கள் இருவரும்… என்ன ரிகா நான் சொல்வது சரி தானே?”

சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தாள் ரிகா… சிரித்தாலும் அவள் கண்களில் மட்டும் ஏதோ சோகம் குடியிருந்து கொண்டே தான் இருந்தது.. அதை அனு கவனித்தும் ஏன் என்று கேட்டு அவளை துன்புறுத்த விரும்பவில்லை…

“இப்படியே பேசிட்டிருந்தால் ஃபங்க்ஷன் முடிந்துவிடும்…. அப்படியே எங்களை வந்த வழியே அனுப்பிட திட்டம் எல்லாம் முன்னாலேயே தயார் செய்துட்டீங்க போல “

“அய்யோ அப்படி எல்லாம் இல்லை ஷன்வி “

“பார்த்தால் எனக்கு அப்படிதான் தோன்றுகிறது…”

“ஏன் ஷன்வி… “

“பின்னே என்ன அனு… இன்னும் ஒன்றும் நீங்க சொல்லவில்லையே…”

“என்ன சொல்லணும் ஷன்வி “

“உங்களை இந்திராணி என்று சொன்னதற்கு பதிலாக மக்குராணி என்று சொல்லியிருக்கலாம் போல…”

“அடிப்பாவி…..”

“அது சரி இந்த பட்டம் வேறு கொடுத்தாகிறதா எனக்கு…??...”

“வேறென்ன பட்டம் உனக்கு யார் கொடுத்தது எப்போ ..???...”

“ஊர்வசி என்று தங்களின் வாயால் சற்று நேரத்திற்கு முன்னால் தான்…”

“ஹா ஹா ஹா…. “

“எதற்கு சிரிப்பு ...?”

“சும்மா தான்… உனக்கு வாயாடி என்ற பட்டமும் சேர்த்து கொடுத்திருக்கலாம் ஷன்வி… “

“அய்யோ அனு, என்னால் முடியலை… என்ன பார்ட்டி என்று இப்பொழுதேனும் சொல்வீர்களா? இல்லை இன்னும் சொல்லாமல் தான் இருக்கப் போகிறீர்களா? “

“சொல்கிறேன், சொல்கிறேன்... உள்ளே வாங்க”

அப்போது அங்கே வந்த அபி ரிகாவிடம் ஒட்டிக்கொண்டாள்… அபி குட்டி தேவதையாய் ஜொலித்தாள்… மிக மிக அழகாக… ரிகா அவளைத் தூக்கி கன்னத்தில் முத்தமிட்டாள்..

“வந்ததும் உன்னிடம் ஒட்டிக்கொண்டாளா... ஹ்ம்ம்” என்ற அனு சிரித்துக்கொண்டே அவர்களை உள்ளே அழைத்துச் சென்றாள்…

ங்கே ஏராளமானோர் இருந்தனர்… பணக்கார மேல்தட்டு நாகரீகம் ஜொலித்தது… விலைஉயர்ந்த உடைகளிலும், கண்ணைப் பறிக்கும் வைரம், பிளாட்டினம் முதலான நகைகளில் அங்கிருந்தோர் தேவலோகத்தில் உள்ளவர்கள் போன்று காட்சியளித்தனர்…

ஷன்வி இது போல் சில இடங்களுக்கு அவளின் தந்தையுடன் சென்றிருக்கிறாள்… ஆனால் ரிகா பழக்கமில்லாதவள் ஆயிற்றே… அதனால் அவளிடம் ஒரு மருட்சி தெரிந்தது. ஷன்வி ரிகாவின் கைகளை மென்மையாக அழுத்தினாள்.. நான் இருக்கிறேன் என்று அது சொன்னது… அதை புரிந்து கொண்டவளாக அவளும் தோழியின் கரத்தில் தன் கரத்தை வைத்து மெலிதாக புன்னகைத்தாள்…

அபி ரிகாவிடம் ஒட்டிக்கொள்ள ரிகாவும் அவளை கீழே இறக்காமல் பிடித்துக்கொண்டாள்… அங்கிருந்த நாற்காலியில் மூவரும் அமர்ந்தனர்… அபி அவளின் மழலை மொழியில் நிறைய பேசினாள்… அவள் சொன்ன சிறு சிறு நகைச்சுவைக்கும் ரிகா தன்னை மறந்து சிரித்தாள்… அதைப் பார்த்த ஷன்வியும் அபியுடன் சேர்ந்து ரிகாவை சிரிக்க வைக்கும் முயற்சியில் வெற்றி கண்டாள்…

“ரிகா நீ இப்படி சிரிக்கும்போது உண்மையாகவே அழகாக தெரிகிறாய்… நீ இதுபோலவே என்றும் சிரித்துக்கொண்டே இருக்கவேண்டும் சரியா??...” என்று அவளின் கைகளைப் பிடித்துக்கொண்டாள்…

ரிகா அபியுடன் பேசி மனம் விட்டு சிரிக்கட்டும் என்றெண்ணி அவர்கள் அமர்ந்திருந்த மேஜையில் ரிகாவின் எதிர்புறம் வந்து அமர்ந்து அங்கு வருபவர்களை வேடிக்கைப்பார்க்க ஆரம்பித்தாள்…

ரிகாவின் இந்த சிரிப்பு ஷன்விக்கு ஒருவித நிம்மதியை அளித்தது… ஆனால் அந்த நிம்மதி இன்னும் சிறிது நேரத்தில் தவிடு பொடியாகி இருந்த இடம் தெரியாமல் அழிந்து போகுமென்று ரிகாவிற்கே தெரியாத போது ஷன்விக்கு தெரிய நிச்சயம் வாய்ப்பில்லை தான்..

அப்போது… அங்கே…

தொடரும்

Go to Episode # 02

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.