" நான் எப்போங்க உங்கள பாத்தேன்... சும்மா சொல்லாதிங்க... "
" நீங்க தான் பொய் பொய்யா சொல்லிட்டு இருக்கீங்க... "
" பொய் பொய்யா சொல்லல... என் பார்வை அப்படி தான்... கண்டுக்காதிங்க... " என்று சமாதான படுத்தினான்...
" ஜாக்ரத" என்று ஆள்காட்டி விரலை உயர்த்தி சிறு குழந்தை போல காட்டினாள்.. அஸ்வினிக்கு அவள் செய்கை சிரிப்பாக இருந்தது.. மீரா வாய் பொத்தி சிரித்தாள்... கையை பாரு.. வெண்டக்கா மாதரி நீளமா.. கடிக்கணும் போல இருக்குது.. என்று மனதில் எண்ணினான்...
" ஒகே" என்று பாவியமாக சொன்னான்...
"எங்க அண்ணனை இப்படி மிறட்டுரிங்க... நாம இருக்குறதே அவர் தோட்டம்.. "
" யாரு தோட்டம் ஆகா இருந்தா எனக்கு என்ன... அப்படி முழிச்சு பாத்தா கண்ணா நோன்டிருவேன்.... ஜாக்ரத... " என்று மிரட்டி விட்டு முன்னே நடந்தாள்..
" அண்ணா வாட் இஸ் திஸ்... உனக்கு கண்டிப்பா ஸ்ரீ வேணுமா? "
" ஏய் என்ன இப்படி கேட்குற... ??"
" இல்ல அடிபேன்... குத்துவேன்.. கொள்ளுவேன்.. எல்லாம் சொல்லுறாங்க... எனக்கு என்னமோ நீ யோசிக்கலாம்னு தோணுது அண்ணா.."
" ஹா ஹா... இப்போ தான் அவள ரொம்ப லவ் பண்ண ஆரம்பிச்சு இருக்கேன்.. சோ சாரி மீரா... "
" இது வேறயா.. நீ நடத்து... பட் உங்க ஜோடி பொருத்தம் சூப்பர் அண்ணா.. "
" தேங்க்ஸ் மீராகுட்டி... "
" அங்கயே ரெண்டு பேறும் பேசிட்டே எவ்ளோ நேரம் நிப்பிங்க.. நான் போறேன்.. இதான் நீங்க எனக்கு தோட்டத்தை சுத்தி காட்டுற அழகா.. வாங்க சீக்கிரம்... " என்று இடுப்பில் கை வைத்து அஸ்வின் மீராவை பார்த்து சொன்னாள்...
" வந்துட்டோம்.. " என்று அவள் அருகில் இரண்டு பேறும் சென்று சேர்ந்து கொண்டனர்..
அங்கு உள்ள மரங்களை பார்த்து கொண்டே வந்தாள்... ஒரு இடத்தில ஆரஞ்சு மரங்கள் தென்பட்டன...
" வாவ்... சூப்பர்... ஆரஞ்சு அப்படியே ப்ரெஷ் ஆகா இருக்கு... ஐயோ... இப்போ தான் முதல் தடவ இத பாக்குறேன் மரத்துல தொங்குற மாதரி... "
என்று தன்னை மறந்து ஸ்ரீ பேசிகொண்டே போனாள்...
"ரொம்ப இன்னொசென்ட் ஆகா இருக்காங்க அண்ணா... "
" ஹ்ம்ம்ம்ம் ஆமா மீரா.. "
" என்ன பெரு மூச்சு விடுறிங்க... நான் கரடி மாதரி தொல்ல பண்றேனா... "
என்று நக்கலாக கேட்டாள்...
" அதெல்லாம் இல்ல மீரா.. " என்று சொல்லி பார்த்த பொழுது ஸ்ரீயை காணவில்லை...
"ஸ்ரீ எங்க இருக்கீங்க... " என்று அஸ்வின் கத்த... மீரா பயந்து போனாள்..
" ஐயோ அண்ணா இவுங்க எங்க போனாங்க... தனிய எங்கயாச்சும் போய் பாதை மாறிடாங்கள... "
" தெரியல மீரா... வா தேடலாம்... "
"ஸ்ரீ... மதி.... ஸ்ரீ,... " என்று கத்தி கொண்டே தேட தொடங்கினர்...
நம்ம ஸ்ரீ எங்க போன தெரியுமா...
ஆரஞ்சு மரத்தை பார்த்த ஆர்வத்துல.. மரத்துல ஏறி பழம் பறிக்க ஏறிடாங்க... ரெண்டு பேறும் என்ன விட்டு தனியா பேசுறிங்கள... கொஞ்ச நேரம் தேடுங்க... என்று வீம்பாக மரத்தில் அமர்ந்தாள்... அவர்கள் இரண்டு பேறும் தேடி கலைத்ததை பார்த்து...
" நான் இங்க இருக்கேன்.. " என்று பலிப்பு காட்டினாள்... அவள் சத்தம் கேட்ட திசையை பார்த்த இருவரில்... மீரா சிரிக்க தொடங்கினாள்... அஸ்வின் கோபம் அடைந்தான்... எவ்ளோ தவிச்சு போய்டேன்... இவள காணாம... இவ என்னடான இப்படி உட்காந்து இருக்கா...
" ஹா ஹா... ஏய் ஸ்ரீ எப்படி ஏறி உட்காந்து இருக்கீங்க ... ? எதுக்கு ஏறுனிங்க??"
" சும்மா பழம் பறிக்க... அண்ட் உங்கள பயமுர்த்த... " என்று சிரிக்க தொடங்கினாள்...
" வில் யு ஷுட் யுவர் மௌத்... " என்று ஸ்ரீயை பார்த்து கத்தினான்... மீராவும், ஸ்ரீயும் அதிர்ந்து போய் வாய் முடி கொண்டனர்...
"எந்த விஷயத்துல ப்ளே பண்ணனும்னு தெரியாத... டோன்ட் யு ஹவெ எனி சென்ஸ்.. " என்று என்ன சொல்லுகிறோம் என்று தெரியாமல் திட்டி தீர்த்தான்...
" அண்ணா ப்ளீஸ்.. டோன்ட் ஸ்பிக் வித் ஹேர் லைக் திஸ்..." என்று மீரா சொன்னதும் வாய் முடினான்... ஸ்ரீ அழுது கொண்டு இருந்தாள்... மரத்தில் இருந்து அவர்கள் கவனிக்கும் முன் கீழே இறங்கி காலில் அடி பெற்று கொண்டாள்...
" ஐயோ ஸ்ரீ.... " என்று மீராவும் அஸ்வினும் பதறி போய் பக்கத்தில் போனார்கள்..
" எனக்கு ஒன்னும் இல்ல.. நான் வீட்டுக்கு போறேன்.... சாரி.. " என்று எழுந்து நடக்க முயன்றாள்.. அவளால் முடியவில்லை... அஸ்வின் அவளை தூக்க முயற்சி செய்தான்..
" தொடதிங்க... எனக்கு போக தெரியும்... " என்று அழுத குரலுடன் சொன்னாள்...
" ப்ளீஸ் ஸ்ரீ... அண்ணா தூக்கி கொல்லட்டும்... உங்களால நடக்க முடியாது... வீடு வரைக்கும் மட்டும் தான்... "
" வேணாம்... திட்டிட்டு இப்போ என்ன திடீர் கரிசனம்.. வேணாம் எனக்கு போக தெரியும்... நீங்க முன்னாடி போங்க... நான் மெதுவா வந்திடுவேன்... " அஸ்வின் வருத்த பட்டான்... சே... இவள திட்டிடோமே... இவளால நடக்க முடியாது.. எப்படி இவள சமாதானம் படுத்தி தூக்கிட்டு போறது...
" ஐ ஆம் சாரி ஸ்ரீ.. உங்கள காணோம்னு கோவத்துல பேசிட்டேன்..."
" வேணாம் ஒன்னும்... " என்று அவர்களை கடந்து நடக்க சென்றாள்... அப்பொழுது அஸ்வின் அவளது கை பிடித்து இழுத்து தூக்கி கொண்டான்...
" அண்ணா நான் போய் டாக்டர்க்கு போன் பண்றேன்..." என்று மீரா ஓடினாள்.. ( ரொம்ப நல்ல தங்கச்சி... அண்ணனுக்கும் அண்ணிக்கும் privacy தராங்க... )
" என்ன கீழ இறக்கி விடுங்க அஸ்வின்... " என்று அஸ்வினை அடிக்க தொடங்கினாள்...
" அடிசிங்கான கிஸ் பண்ணிடுவேன்.. பேசாம வாங்க.. " என்று மிரட்டல் விட்டு கண் அடித்தான்...
" கொன்னுடுவேன் .. " என்று மிரட்டினாள்... ஏனோ அவளுக்கு அவன் கண்களை பார்த்து பேச முடியவில்லை... ஒன்றும் பேசாமல்.. அவள் கைகளை அவன் கழுத்தில் கட்டிகொண்டாள்...
மழை பெய்ய தொடங்கியது!!!
"மழை பெய்யுதே... "
" ஆமா பெய்யுது... "
" கீழ எறக்கி விடுங்க.. நானே நடந்து வரேன்" அவளுக்கு கூச்சமாக இருந்தது... அவள் இடையில் அவன் கை இருக்க...
" பேசாம வரிங்கள இல்ல... இல்ல கிஸ் பண்ணவா...” என்று கேட்டதும் வாய் மூடி கொண்டாள்.. அவளை இறுக்கமாக பிடித்து கொண்டான்..
ஐயோ இவன் என்ன இப்படி பிடிச்சு இருக்கான்.. விட்டா எலும்பு நொரிங்கிடும்.. எதாச்சும் சொன்ன குதர்கமா பேசுவான்.. எப்போ இந்த வீடு வருமோ... ஒரு ஐடியா சத்தமா இவன் காதுல கத்துன இறக்கி விற்றுவான்ல.. ஹா ஹா.. உனக்கு சூப்பர் பிரைன் ஸ்ரீ... என்று நினைத்து கொண்டு அவன் காதில் கத்த வாய் திறந்து அவன் காது அருகில் வரும் பொழுது முகத்தை திருப்பி கொண்டான்.. அவளுடைய பல் அவன் கன்னத்தில் பதிந்தது..
" இப்படியா கடிச்சு வைப்ப... " என்று பொய் கோவம் காட்டினான்...
" இல்ல நான் வேணும்னே அப்படி செய்யல.. உங்க காதுல கத்த வந்தேன்... நீங்க தான் முகத்த திருப்பி இப்படி ஆகி போச்சு... "