(Reading time: 18 - 36 minutes)

 

" ஹ்ம்ம் ஹ்ம்ம் நல்லா தான் இருந்திச்சு..." என்று விஷமமாக சிரித்தான்..

" கொன்னுடுவேன்" என்று மிரட்டினாள்...

" அப்படியா சரி வீடு வந்திரிச்சு அங்க போய் கொன்னுக்கோ... " என்று அவன் சொல்லிய பொழுது திரும்பி பார்த்தாள்... வாசலில் மீரா, காஞ்சனா, கல்பனா நின்று கொண்டு இருந்தனர்... வாசலில் சென்று அங்கு உள்ள சோபாவின் மேல் ஸ்ரீயை கிடத்தினான்... பின் நகர்ந்து கொண்டான்...

" என்னமா ஸ்ரீ பாத்து போகி இருக்கலாம்ல.. ரொம்ப அடி பற்றிச்சா கண்ணு"

" இல்ல ஆண்டி... "

" குடு கால.. ஆண்டி பாக்குறேன்.. " என்று அவள் கால் பற்றி மடியில் வைத்தாள்...

" ஐயோ என்ன ஆண்டி இது.. உங்க மடில வச்சிக்கிட்டு... ப்ளீஸ் ஆண்டி எனக்கு ஒன்னும் இல்ல... " என்று காலை உருவி கொண்டாள்..  அங்கே வந்த அஸ்வின்...

" அம்மா தள்ளுங்க... " என்று அவரை தள்ள சொல்லி விட்டு அவள்  காலை எடுத்து தன மடியில் வைத்து மருந்து போட துவங்கினான்...

" ப்ளீஸ் விடுங்க... நானே போட்டுகிறேன்... :" என்று அவள் மெதுவான குரலில் கெஞ்சினாள்... அவளை தீர்கமாக ஒரு பார்வை பார்த்தான் அஸ்வின்..  வாய் மூடி கொண்டாள்...

அவன் மருந்து தேய்த்து விட அவளுக்கு மிகவும் குசியது... நெளிந்து கொண்டு இருந்தாள்.. ஒரு வழியாக மருந்து தடவி அவளை விடுவித்தான்...

" இப்போ பரவா இல்லையா ஸ்ரீ"

" ஹ்ம்ம் இப்போ ஒகே மீரா..  ஆண்டி நான் வீட்டுக்கு போறேன்.. என்ன ரொம்ப தேடுவாங்க.. "

" கொஞ்ச நேரம் இருந்திட்டு போமா... "

" இல்ல ஆண்டி இன்னொரு நாள் பாக்கலாம்.. "

" சரிமா.. மீரா ஸ்ரீயை அவுங்க வீட்ல விட்டு வந்திடு.. தனியா நடந்து போறது கஷ்டம்... " என்று காஞ்சனா சொல்ல அவர்கள் எல்லாரிடமும் விடை பெற்று கிளம்ப அஷ்வினிடம் மட்டும் சொல்லமால் கிளம்பினாள்...

ராட்சசி... சொல்லாம போறா பாரு.. இரு இரு.. கல்யாணம் ஆகட்டும் உன்ன கவனிச்சுகிறேன்... சரியான வாலு பொண்ணு தான் நீ.. ரொம்ப மிரட்டுற என்ன.. அதான் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு… நீ கத்த வரணு தெரியும் அதான் கன்னம் திருப்பி கடி வாங்கிகிட்டேன்... அப்போவே உன்ன கிஸ் பண்ணனும் போல இருந்திச்சு... சரி போனா போகுதுன்னு விட்டேன்...உன் கால் ரொம்ப மென்மையா இருக்கு செல்லகுட்டி.. லவ் யு சோ மச்... உம்மம்மாஹ்... என்று மனதில் பேசி கொண்டான்...

ஸ்ரீ வீடு!

" இந்த பொண்ண இன்னும் காணோம்... போன போன இடம் வந்த வந்த இடம்னு இருக்க மாட்ட.. " என்று கோமதி புலம்பி கொண்டு இருந்தார்.. வாசல் பக்கம் அரவம் கேட்க..  மீரா ஸ்ரீயுடன் தொத்தி தொத்தி நடந்து வந்தாள்...

"ஐயோ என்னடி இது.. உன்ன என்ன தான் பண்றது... எங்கபோனாலும் விழுந்து வச்சிட்டு வருவியா.. என்னங்க இங்க வாங்க... உங்க பொண்ண.. " என்று கோமதி எல்லாரையும் அழைத்தாள்..

" ஐயோ அம்மா ஒன்னும் இல்ல.. ஏன் இப்படி ஊற குட்டுற மாதரி சவுண்ட் விடற.. சின்ன அடி தான்.. ப்ச்... சொல்லுங்க மீரா.. "

" ஆமா ஆண்டி சின்ன அடி தான்... " அதற்குள் அனைவரும் அங்கு குடினார்கள்...  எல்லாரும் வசை பாடி முடித்து பாசம் பொழிந்தனர்.. மீராவுக்கு ஆச்சிரியமாக இருந்தது.. சூப்பர் பாமிலி ஸ்ரீக்கு என்று மனதில் நினைத்து கொண்டாள்.. ஆனால் தானும் இந்த குடும்பத்தின் அங்கம் ஆகா போகிறோம் என்று அவளுக்கு அப்போது தெரியவில்லை...

" சாரி ஆண்டி... சாரி அங்கிள்... "

" அதெல்லாம் இல்லமா... வா வீட்டுக்குள்ள.. "

" இல்ல ஆண்டி நான் கிளம்புறேன்.. ஸ்ரீ உங்க நம்பர் குடுங்க.. நான் காலைல கால் பண்றேன்..." என்று கூறி கொண்டு கிளம்பினாள்...

அதிகாலை 6 மணி!

ஸ்ரீயின் போன் அழைத்தது அவளை..

" ஹலோ... "

"..."

" ஹலோ... யாரு பேசுறது... "

"... "

" ஹலோ... காது கேட்கலியா... பேசுங்க.. " என்று கத்தினாள்...

" இட்ஸ் மீ அஸ்வின்.. "  என்று அவன் குரல் கேட்டதும் வாரி சுருட்டி கொண்டு எழுந்தாள்..

( அவுங்க என்ன பேசுனாங்க... மீரா அவுங்க ஜோடிய எப்படி மீட் பண்றாங்க... ஸ்ரீ வீட்டில மணி அண்ணன் ப்ரொப்லெம் என்ன ஆகுதுன்னு பாப்போம்.. இந்த எபிசோடு ஜாலியா போச்சா.. நெக்ஸ்ட் எபிசோடு கொஞ்சம் சோகம் கொஞ்சம் சந்தோஷமாக போகும்.. நெக்ஸ்ட் எபிசோடுல மீட் பண்ணலாம்.. )

தொடரும்...

Go to episode # 03

Go to episode # 05

{kunena_discuss:740}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.