"நான் கேஸ்சை வித் டிரா பண்ண போறேன் அம்மூ!"
"என்ன?"
"ஆமா...எனக்கு இப்போ கேஸ் முக்கியம் இல்லை...எனக்கு உங்க பாதுகாப்பு தான் முக்கியம்!"
"ஆனா...."
"வேணாம் அம்மூ...எதையும் சொல்லி என் மனசை மாற்ற முயற்சி பண்ணாதே!"
"சரிங்க...உங்க மனசை மாற்றலை.ஆனா,ஒண்ணு மட்டும் சொல்லட்டா?"
"ம்..."
"கேஸ்சை வித் டிரா பண்ணியும்,எங்க உயிருக்கு ஆபத்து வந்தா?"
"அது எப்படி வரும்?"
"வந்ததுன்னா?ரவி இங்கே வந்திருக்கான்...ஒரு வேலை உங்களை பழி தீர்க்கணும்னு அவன் பழி வாங்கினா?"
"என்னை மீறி எப்படி அது நடக்கும்னு நினைக்கிற?"
"இதே பதிலை உங்க கேஸ் விஷயத்துலையும் சொல்ல முடியும்ல??"
".............."
"ரகு இந்த கேஸ்காக உயிரையே விட்டுருக்காரு!அதற்கு எதாவது நன்றிக்கடன் பண்ணனும்ல?"
"..........."
"இல்லனா...அந்த உயிரோட மதிப்பு மறைந்து போய்விடுமே!"
"..............."
"ரகு நிச்சயமா உங்க தோல்வியை ஏற்றுக்க மாட்டார்!அவர்,நீங்க எப்படியாவது ஜெயிக்கணும் தான் நினைச்சிருப்பார்! நீங்க விட்டுக் கொடுக்கறது,அவர் நம்பிக்கையை உடைக்கறதுக்கு சமம்."
"அம்மூ!"
"நான் சொல்றதை சொல்லிட்டேன்.அதற்கு மேல்,முடிவு உங்களுடையது!"
"ஆனா,ராகுல்....."
"ராகுல் கூட இருக்கிறது சாதாரண பாதுகாப்பு இல்லை...எனக்கு நம்பிக்கை இருக்கு!அப்பறம்...உங்க இஷ்டம்!"
".............."
"நல்லா யோசிங்க!"
ஒருவன் தனது வருங்கால முடிவை அமைதியான மனதோடு எடுத்தால் அவனது எதிர்காலம் சிறப்பாகிறது.அதுவே, மனதை அமைதிப்படுத்த வருங்கால முடிவை ஒருவன் எடுத்தால்....அவனது எதிர்காலம் முட்கள் நிறைந்த விருட்சமாகிறது-பகவத்கீதை.
இங்கே,ஆதித்யா எடுக்க உள்ள முடிவு எது?அது மனதை அமைதிப்படுத்துமா?அல்லது....சர்வத்தையும் அமைதிப்படுத்துமா?பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!!!!!
தொடரும்...
{kunena_discuss:722}