"அங்க எங்க பாப்பா இருக்கு" என்றான்.
"அது பூலோகத்தில் இருப்பவர்களுக்கு தெரியும். உங்களக்கு தெரியுதா?" என்று அத்வைதை கேட்டாள் நிஷ்
"நல்லாவே தெரியுது" என்றான் அத்வைத்.
“என்னடா அதிசியம் நடக்குது. சிடுமூஞ்சிக்கு கிண்டல் புரியறதே கஷ்டம்னு நினைச்சால் அது கிண்டல் செய்ததை புரிந்து பதில் சொல்லுது” என்று நினைத்தாள் அஞ்.
சர்வேஷ் அத்வைதை பார்த்து முறைக்க
"சந்தோஷை பார்க்க போகலாமா?" என்றாள் நிஷ்.
"போகலாம்" என்றான் அத்வைத்.
"ஹாய் சந்தோஷ். எப்படி இருக்க?" என்றாள் ஹாசி.
"நல்லா இருக்கேன் அக்கா"
"என்ன படிக்கற கண்ணா?" என்றாள் சாது.
"2std படிக்கறேன் அக்கா"
"எந்த ஸ்கூல்" என்றாள் ஹாசி .
"ராமகிருஷ்ணா ஸ்கூல படிக்கறேன் அக்கா"
"இங்க என்ன குவஸ்டீன் அண்ட் அன்ஸ்சர் செக்ஷனா நடக்குது? அவனை மாத்தி மாத்தி கேள்வி கேக்கறீங்க. உங்களுக்கு பதில் சொல்லியே டையர்டாகிடுவான்" என்றாள் நிஷ்.
"விடு நிஷ். இப்பதான் வந்த வேலையை ஒழுங்க செய்யறாங்க" என்றாள் அஞ்.
இருவரும் நிஷையும் அஞ்சையும் முறைக்க
"சரி சரி. நீங்க கேள்வி கேளுங்க" என்றாள் நிஷ்.
"நீ நல்லா படிப்பியா?" என்றாள் ஹாசி.
"ஏண்டி. இப்போ அது ரொம்ப முக்கியமா?" என்றாள் அஞ்.
"இப்போ எங்களை பேசவிட போறீங்களா இல்லையா?" என்றாள் சாது.
"நீ பேசுமா. தாராளமா பேசு" என்றாள் அஞ்.
அவனுடன் நால்வரும் நேரம் போவது தெரியாமல் பேசினர். ஹீரோ நால்வரும் இவர்கள் பேசுவதை கேட்டுகொண்டிருந்தனர்.
"அக்கா. நான் உங்களை கேள்வி கேட்கிறேன். நாலு பேர்ல யார் பதில் சொல்றீங்கன்னு பார்க்கலாம்."
"காலேஜ்ல கேள்வி கேட்டாலே பதில் சொல்லமாட்டோம். இதுல நீ வேற கேட்கறையா " என்றாள் சாது.
"எனக்கு பிடிக்காத வார்தைகளில் கேள்வி, பதிலும் அடக்கம்" என்றாள் அஞ்.
"கேள்விக்கு பதில் சொல்றது எல்லாம் இவள்தான் கரெக்ட்" என்று நிஷாவை கை காட்டினால் ஹாசி.
"உன்னால் முடியாதுன்னு சொல்லு. என்னை ஏன் சொல்கிறாய் " என்றாள் நிஷ்.
"பச். சொல்லுங்க அக்கா"
"நாங்க மட்டும்தான் உனக்கு கிடைச்சோமா. அண்ணாங்க இருக்காங்க. அவங்களை கேள்" என்றாள் நிஷ்.
"ஹ்ம்ம். ஓகே. அக்கா,அண்ணா இந்த விடுகதைக்கு பதில் சொல்லுங்க"
"நீ முதல்ல கேளு" என்றான் நவீன்”.
"ஆகாரமாக எதை தந்தாலும் சாப்பிடுவேன், ஆனால் நீரை குடிக்க தந்தால் இறந்து விடுவேன், நான் யார்?" என்றான் சந்தோஷ்.
"அப்ப கண்டிப்பா அது ஹர்ஷாதான்." என்றான் சர்வேஷ்.
"நீ ரொம்ப ஒழுங்கா" என்றான் ஹர்ஷா.
"டேய். நீரை குடித்தால் இறந்து விடுவேன்னு சொன்னான்" என்றான் நவீன்.
"இது அவுட் ஆப் சிலபஸ்." என்றான் அத்வைத்.
"ஆமாம்" என்று கோரஸ் பாடினர் மற்ற மூவரும்.
"அக்கா. பதில் சொல்லுங்க"
அஞ்,ஹாசி,சாது மூவரும் நிஷாவை பார்க்க
"ஏன் எல்லோரும் நிஷா அக்காவை பார்க்கறீங்க. நீங்க ட்ரை பண்ணுங்க" என்றான் சந்தோஷ்.
"தெரிஞ்சா ஏன்டா அவளை பார்க்க போறோம்" என்றாள் ஹாசி.
"நிஷ் சீக்கரம் சொல்லு" என்றாள் சாது.
"எனக்கும் தெரியலை சந்தோஷ். நீயே சொல்லு" என்றாள் நிஷ்.
விடை தெரிந்தும் சந்தோஷிற்காக தெரியாதுபோல் நடித்தனர்.
"எனக்கு தெரியுமே. கிளாஸ்ல நான் கேட்டதும் பதில் சொன்னேன்" என்றான் சந்தோஷ் சந்தோஷமாக.
"யு ஆர் சோ கிளெவர் சந்தோஷ்" என்றான் நவீன்.
"ஹ்ம்ம். சோ ப்ரில்லியன்ட்" என்றாள் நிஷ்.
"சீக்கரம் பதில் சொல்லுடா" என்றாள் அஞ்.
"இல்லையென்றால் அவள் தலை வெடித்திடும் " என்றாள் சாது.
"சரி சொல்றேன். அது நெருப்பு" என்றான் சந்தோஷ்.
"ஓ" என்ற கோரசுடன் கை தட்டி அவனை மகிழ்வித்தனர்.
அனைவரும் சந்தோஷிடம் விடைபெற்றனர்.
"ப்ரெஷ் ஜூஸ் குடிச்சிட்டு போகலாமா" என்று ஹர்ஷா தோழியரை கேட்டான் .
"போகலாம்" என்றாள் சாது.
பெண்கள் முன்னால் செல்ல ஆண்கள் அவர்களை தொடர்ந்தனர்.
"ஹாய் அஞ்சனா" என்ற குரல் அனைவரையும் நிறுத்தியது. அஞ் திரும்பி அவனை பார்த்தாள். அவன் கமல்.
"ஹாய்" என்றாள் அஞ் சிறிதும் ஆர்வமில்லாமல்.
"வாட் யு ஆர் டூயிங்க் ஹியர்? டூ யு நீட் எனி ஹெல்ப்?" என்றான் கமல்.
"இந்த ஹாஸ்பிடலை வாங்கலாம்னு இருக்கேன். அதான் சும்மா ஒரு விசிட் பிரிண்ட்ஸ் கூட" என்றாள் அஞ்.
"ஹ ஹா..நீ கேட்டால் கண்டிப்பா மாமா வாங்கி தருவார்" என்றான் கமல்.
"வாங்கி நான் என்ன செய்ய போகிறேன். ஓகே. நாங்க கிளம்பறோம். பை"
"இந்த லூசு இங்க என்ன பண்ணுது" என்றாள் ஹாசி.
"யாருக்கு தெரியும்." என்றாள் அஞ்.
"இன்னிக்கு உன்கிட்ட வழியாமல் விட்டானே. என்ன அதிசயம்" என்றாள் சாது.
"நம்ம கூட 4 ஸ்ட்ராங் பெர்சன்ஸ் இருக்காங்க. அவங்க அவனை அடிச்சிட்ட. அதான் கிளம்பிட்டான்" என்றாள் நிஷ்.
இவள்கள் பேசுவது ஹீரோஸ் நால்வருக்கும் கேட்டது. நிஷாவின் பதிலை கேட்டு சிரித்தனர்.
ஜூஸ் குடிக்க சென்றனர். அங்கே என்ன நடந்திருக்கும்ன்னு உங்களுக்கே தெரியும். ஹாசி, சாது, சர்வேஷ், ஹர்ஷா அவர்கள் வேலையை ஆரம்பிக்க மற்ற நால்வரும் அவர்களை கிண்டல் செய்தனர்.
அவர்களை நிஷாவின் ரிங்டோன் கலைத்தது.
"ஹாய் தேவ்"
"ஹாய் ஸ்வீட்டி. எப்படி இருக்க"
"தேவ். டோன்ட் கால் மீ ஸ்வீட்டி"
"ஓகே. கோவப்படாதே குட்டிமா"
"ஹ்ம்ம். குட்"