(Reading time: 7 - 14 minutes)

" ரம்பிச்சுட்டியா ? எல்லாருகிட்டயும் அன்பாய் இருக்குற நீ !  வினிகிட்ட  ( விஷ்வாநிகாவின் செல்லப்பெயர் ) மட்டும் ஏன்டா  எதிர் கட்சியா நிற்கிற ?"

" எல்லாத்தையும் வார்த்தையால் சொல்லிட முடியாது மைதாமாவு இந்த பேச்சை விடு .. இதைவிட சூப்பர்  நியுஸ் சொல்லவா ? "

" என்னடா ?"

" எனக்கு வீட்டில் பெண் பார்க்கிறாங்க !"

" ..."

" என்னடி ஷாக் ஆகா மாட்டியா ? அட்லீஸ்ட் ஒரு பெண்ணுடைய வாழ்க்கையை கெடுத்திடாதேன்னு நீ சொல்லுவன்னு எதிர்பார்த்தேன் .. நீ என்னடான்னா அமைதியா இருக்கியே ? "

" ..."

" ஹே என்னாச்சு ?"

" இல்ல, வந்து , என்ன இவ்வளவு சீக்கிரம் ? இப்போதானே படிப்பு முடியுது ?"

" ம்ம்ம் ஆமா, தாத்தா ஆசைபடுறாராம் .. என் லைப்ல அவர்தானே நம்பியார் !" என்று தாத்தாவின் நினைவில் சிரித்தான்  அவன் .. அபிநந்தன் இயல்பிலேயே கடுவன் பூனைதான் .. அதனால் தாத்தா விரும்பி வம்பு பண்ணுவது  சகியிடம் மட்டும்தான் .. மனதிற்குள் ஒருவர் மீது ஒருவர் பாசமழையே பொழிந்தாலும் வெளியில் இப்படித்தான் அடிக்கடி சண்டையிட்டு கொள்வர் ..

" யாரோ ஒரு பெண்ணை எப்படி கல்யாணம் பண்ணி நேசிக்க  போற  சகி ?"

" இப்போதானே அவ யாரோ ஒருத்தி ? கல்யாணம் ஆகிட்டா என் மனைவி ஆகிடுவா அவ .. என் மனைவியை நேசிக்க எனக்கு எந்த கஷ்டமும் இல்லையே  தான்யா !"  என்றவன் வாடியிருந்த அவள் முகத்தை பார்த்தான் .. முகம் பார்த்தே அகம் படிக்கும்  வித்தையில் அவன் கில்லாடியல்லவா ? அவள் பாவனையில் ஓரளவு அவனுக்கு நடப்பது புரியவும் , நேரடியாகவே அவளை வினவினான் .

" உனக்கு இதில் கொஞ்சம் கூட இஸ்டம் இல்லை போல இருக்கே ! எதனால் தான்யா ?"

 அவனது நேரடி தாக்குதலில் தலைகீழ் விழாத குறையாய் விழித்தாள்  தான்யா . எனினும் அவனது குணம் அறிந்தவள், பேச்சை மாற்றாமல்

" நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன் " என்றாள் . அதிர்ந்துதான் போனான் சகிதீபன். வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகளாய் அவன் வார்த்தைகள் வெளியேறும் முன்னே, கண்களை இறுக மூடி தலை கவிழ்ந்து அவள் நின்ற கோலத்தில், கொஞ்சம் சாந்தமானான் அவன் . எனினும் அவளுக்கு சாதகமான பதிலை  நிச்சயம் அவன் சொல்லவில்லை .. ஆனால் இதற்கு தான்யாவிடமிருந்து வந்த எதிரொலி என்ன ?

குழலின் அடுத்த கீதத்தில் இணைவோம்

Episode # 02

{kunena_discuss:883}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.