“நான் தினமும் வந்துட்டுதானே இருக்கேன்.”
“இல்லையே! நீ வரலையே.”
“நான் வந்தப்ப நீங்க எல்லாம் வீட்டுக்கு போயிடுவீங்க. நான் கொஞ்சம் வெளி வேலையா போக வேண்டியிருந்தது. மாலை நேரங்களில் உன் அக்காகிட்டயும், மாமாகிட்டயும் வந்து ரிப்போர்ட் பண்ணிட்டுதானே போனேன். நீ அவங்ககிட்ட கேட்கலையா?”
“அப்படி என்ன வேலை? நீயே நேரில் போய் பார்க்கிற மாதிரி.” அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் எதிர் கேள்வி கேட்டாள்.
“நானே போகனும்னு அவசியம் கம்பெனிக்கு இல்லை. எனக்குதான் இருந்தது.” பூடகமாய் பேசினான்.
என்ன என்று புரியாமல் பார்த்தாள்.
“நீ ஏன் தனா நான் வராததற்காக இவ்வளவு வருத்தப்படுகிறாய்? நீதான் என்னை வேண்டாம்னு சொல்லிட்டியே. அப்புறமும் ஏன் உனக்கு கவலை?
...
This story is now available on Chillzee KiMo.
...
குமாரை முறைத்தார்.
“பிரச்சினை எதுவும் இல்லை சார். இவர் எனக்கு தெரிஞ்சவர்தான். நான் பார்த்துக்கிறேன் நீங்க போங்க.”
அவர் சென்றுவிட்டார். அவனை உள்ளே அழைத்துக்கொண்டு நுழைந்தாள். ஆனால் உடனே வீட்டுக்குள் அழைத்துச்செல்லவில்லை. தோட்டத்திற்குள் நுழைந்தாள். அவன் கேள்வியாகப் பார்த்தான்.