சிந்தனாவுக்கு அவனைப் பார்க்க பார்க்க கோபம் அதிகரித்தது. அவளுக்கு அன்றொருநாள் நடந்த நிகழ்ச்சி கண்முன் வந்தது.
அன்று சிந்தனாவும் நந்தினியும் போரடித்துப் போய் மியூசிக் சேனலை பார்த்துக்கொண்டிருந்தனர். இடையிடையில் கமெண்ட் செய்துகொண்டிருந்தனர்.
திடீரென்று நந்தினியிடம் இருந்து எந்த சத்தமும் வராது போகவே அவளை திரும்பி பார்த்தாள். அவளோ கண்கள் கலங்க வெறித்துப்பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.
“ஏய்! நந்து. என்னாச்சு உனக்கு?”
அவள் கேட்டதுதான் தாமதம். உடனே அவள் விசும்ப ஆரம்பித்துவிட்டாள். இதுவரைக்கும் நந்தினியை அப்படி பார்த்ததே இல்லை. எப்போதும் சிரித்த முகமாக வளைய வருவாள். அதுதான் நந்தினியிடம் சிந்தனாவுக்கு பிடித்த விசயமே.
“எனக்கு ஊர் ஞாபகம
...
This story is now available on Chillzee KiMo.
...
பெருமூச்சு வந்தது.
நினைவில் இருந்து மீண்டாள்.
“உங்க சுயநலத்துக்காக நந்துவை விட்டுட்டு ஓடினீங்களே! அவ எப்படியெல்லாம் கஷ்டப்படுவான்னு யோசிச்சீங்களா? இப்ப எந்த முகத்தை வச்சுக்கிட்டு என் பொண்டாட்டின்னு வந்தீங்க? போறதுக்கு முன்னாடி உங்க குழந்தையையாவது நினைச்சுப் பார்த்திருக்கலாம்.”