அவள் கோபமாக பேசப்பேச அவன் தலைகுனிந்து நின்றிருந்தான்.
“சரி வாங்க உள்ளே போகலாம்.”
உள்ளே அழைத்துச்சென்றாள்.
“நந்து! விருந்தாளி வந்திருக்காங்க. ஒரு கப் டீ கொண்டு வர்றியா?”
சற்று நேரத்தில் டீயுடன் வந்த நந்தினி கணவனை எதிர்பாராமல் பார்த்ததில் திகைத்து நின்றாள். அவள் கால்கள் பலமிழந்தன போன்று தடுமாற அவளை தாங்கினாள் சிந்தனா. அவளை அப்படியே வரவேற்பறையில் இருந்த நாற்காலியில் அமர வைத்தவள் அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகினாள்.
“நந்தும்மா! எப்படி இருக்கே?” கரகரத்த குரலில் கேட்டான் குமார்.
அவள் தெளிவு பெற்றாள்.
“எந்த முகத்தை வச்சுக்கிட்டு இங்கே வந்தே?” சீறினாள்.
“நந்து நான் திருந்திட்டேன். என்னை மன்னிச்சிடு.”
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் பார்த்திருந்தான்.
“என்னோட மகன் சக்தி வளர ஆரம்பிச்சிட்டான். இன்னும் கொஞ்ச நாளானால் அப்பா எங்கேன்னு கேட்க ஆரம்பிச்சுடுவான். உங்களை மாதிரி ஒரு அப்பா அவனுக்கு கிடைக்கனும்னு ஆசைப்படறேன். உங்களை மாதிரி என்ன நீங்களே அவனது அப்பாவாகனும்னு நினைக்கிறேன்.” சொல்லிவிட்டு அவன் முகத்தை பார்த்தாள்.