“நாங்க சொல்றோம் டாக்டர்.” சொன்னவள் தங்கையை பார்க்க அவளும் உள்ளே சென்றாள்.
விஸ்வநாதன் சோர்வுடன் படுத்திருந்தார். அவரை சுற்றி பல்வேறு மருத்துவ உபகரணங்கள் இருந்தன.
சுஜயா அவரைப் பார்த்து பேச்சு வராமல் அவர் கைகளை மென்மையாக பற்றிக்கொண்டாள்.
“என்ன மாமா இப்படி பயமுறுத்திட்டீங்களே?” சிந்தனாதான் சூழ்நிலையை இயல்பாக்கினாள்.
அவர் சிரிக்க முயன்றார்.
“மாமா. டாக்டர் ஏதோ சொன்னாரே.” கண்டிப்பான குரலில் கேட்டாள் சுஜயா.
அவர் சிரித்தார். அவர் பெற்றோருக்கு பிறகு அவரைக் கண்டிக்க சுஜயாவால் மட்டும்தான் முடிந்தது. அவரது மனைவி பாக்கியமே சில நேரங்களில் அவரிடம் ஏதாவது காரியம் சாதிக்க வேண்டும் என்றால் சுஜயாவிடம் தான் சிபாரிசுக்கு வருவார். அந்த அ
...
This story is now available on Chillzee KiMo.
...
்களின் மழலை கேட்டு மகிழ்ந்தார்.
“அம்மாடி சுஜா. இன்னிக்கு என்னவோ உன் அத்தை சமையலை சாப்பிடனும்னு தோணுது. உனக்குதான் அவ டேஸ்ட் வரும். இன்னிக்கு ஒருநாள் செஞ்சு தருவியா?” ஏக்கமுடன் கேட்டார்.
“என்ன மாமா இப்படி கேட்டுட்டீங்க? அதைவிட எனக்கு வேற என்ன வேலை?” கேட்டவள் உடனே களமிறங்கினாள்.