அவளை தூக்கிவிட்டவன், அவள் உடையில் இருந்த செடி கொடிகளை அகற்றிவிட்டுக்கொண்டே,
“பார்த்து வந்திருக்கலாம்லம்மா?... நல்ல வேளை செடி இருந்ததால, அடி படலை… இல்லன்னா அடிபட்டு உனக்கு தான வலிச்சிருக்கும்…” என சொல்ல
அவள் அவனை புதிதாக பார்த்தாள்…
“என்னம்மா?... அடி எதும் பட்டிருக்கா?... வலிக்குதா?... ஹாஸ்பிட்டல் போகலாமா?...” என அவன் கேட்டுக்கொண்டே போக,
அவள் வைத்த கண் வாங்காமல் அவனைப் பார்த்தாள்…
அவளின் முன் சொடக்கு போட்டு அவளை தன் பக்கம் பார்க்க வைத்தவன்,
“என்னாச்சு?...” என கேட்க
“ரொம்ப தேங்க்ஸ்… எனக்கு ஹெல்ப் பண்ணினதுக்கு…” என்றாள்…
“ஓ… யூ ஆர் வெல்கம்… பட் எனக்கு நீ இப்போ ஒரு ஹெல்ப் பண்ணனுமே…” என்றான் அவன்…
“என்ன ஹெல்ப்?...” என அவளும் யோசித்துக்கொண்டே கேட்க
“நீ எப்படி விழுந்த இங்க?...” என கேட்டான் அவன்…
“அது… நான் கால் தவறி விழுந்துட்டேன்…” என்றாள் அவள் மழுப்பியபடி….
“ஓ…” என்றவனுக்குள், அவள் பொய் சொல்கிறாள் என உறுதியாக தெரிய,
மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை அவன்….
“சரி… எனக்கு ஸ்கூலுக்கு நேரம் ஆச்சு… நான் கிளம்புறேன்… நீயும் பார்த்துப்போ” என அவன் எழுந்து கொள்ள,
“நீங்க எந்த ஸ்கூல் படிக்குறீங்க?...” எனக் கேட்டாள் அவள்…
அவன் அவளை சிரிப்புடன் பார்த்தவாறு,
“விவேகானந்தர் ஸ்கூல்…” என சொல்ல
“ஓ… அதுவா?...” என்றவள், “சரி… எனக்கு நேரம் ஆச்சு…” என்றபடி அவள் முன்னேறி நடக்க,
அவன் அவளுக்கு எதிர்திசையில் சென்றான் தனது பள்ளியை நோக்கி…
செல்லும்போது அவள் பத்திரமாக செல்லுகிறாளா என திரும்பி பார்த்துக்கொண்டே சென்றான் அவன்…
அவளுக்கு அந்த எண்ணம் எல்லாம் இல்லை பள்ளி செல்லும் வரை… பள்ளி வாயில் அடைந்ததும் உள்ளே செல்ல நினைத்தவள், சட்டென திரும்பி அவள் வந்த திசையைப் பார்க்க
அதே நேரம், நடந்து கொண்டிருந்த அவனும் சட்டென திரும்பி பார்க்க, அவள் பட்டென பள்ளிக்குள் நுழைந்தாள்…
அவளின் அந்த பதட்டம் அவனுக்கு சிரிப்பைத் தந்தது…
தொடரும்
{kunena_discuss:907}