18. ஒரு கூட்டுக் கிளிகள் - ராசு
வாசலில் அழைப்பு மணி ஒலிக்க விரைந்து சென்று கதவைத் திறந்தாள் சுஜயா. வெளியில் முகம் நிறைய எதிர்பார்ப்புடன் ஒரு பெண்மணி நின்று கொண்டிருக்க அருகில் அலட்சியமாய் ஒரு இளைஞன் நின்றுகொண்டிருந்தான். சுஜயாவைப் பார்த்ததும் அந்த பெண்மணி பரவசமடைந்தார்.
“என் கண்ணே! என்னமா வளர்ந்துட்டே?” என்று கண்கள் கலங்க சுஜயாவை அணைத்துக்கொண்டார்.
சௌந்தரத்தை சுஜயாவுக்கு அடையாளம் தெரியவில்லை. எப்போதாவது பிறந்தகம் வந்து சென்றவர் அவர். அத்தோடு சிறு வயதில் இருந்த தோற்றம் இப்போது வயோதிகத்தில் மாறியிருந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
குங்க.” சிரிப்புடன் சொன்னாள்.
அருகில் பிரமிப்பு விலகாமலே நின்று கொண்டிருந்தான் ஜெயந்தன். பெரியவர்கள் அனைவரையுமே ஒன்றாக அமரச்சொல்லி தானே பரிமாறினாள்.
“அடடா! என் மருமகளோட கைப்பக்குவம் அப்படியே மயக்குற மாதிரி இருக்கே. யாருக்கு கொடுத்து வைத்திருக்கோ?” ஏக்கமுடன் கூறினார் சௌந்தரம்.