“சரிம்மா நான் என் தங்கச்சிய நல்ல படியா பார்த்துப்பேன்” ...வாக்களித்தான் சிறுவன் சங்கரன் ....கலையரசியின் வீட்டில் அவள் கணவனின் அண்ணனுக்கு இரு புதல்வர்கள் ....தனக்கும் முதலில் சங்கரன்….. தன் இரு அண்ணனுக்கும் இரு புதல்வர்கள் ...தனக்கு இம்முறை பெண் பிள்ளை பிறக்க வேண்டும் என்று தன் பிறந்த வீட்டு குல தெய்வத்தை வேண்டி கொண்டாள் கலையரசி ...தனக்கு ஒரு பெண் பிள்ளை பிறந்து அவளை ஆதிக்கு மணம் முடித்து தன் மதனிக்கு சம்மந்தி ஆக வேண்டும் என்ற பேராவல்…… காரணம் ஆதியின் அழகும் அவனின் அறிவும் ..அவன் மேல் இவளுக்கு ஏற்பட்ட ஈர்ப்பு ...பாசம் எனலாம் ...
தன் பிரியமான ஆதியை மடியில் அமர்த்தி அவன் தலை தீடி சொல்வாள் கலையரசி ...டேய் ஆதி ...அத்தை வயித்துக்குள்ள உன் பொஞ்சாதி ..ஒரு குட
...
This story is now available on Chillzee KiMo.
...
ளை பொன்னு என்றே அழைக்க தொடங்கியிருந்தான் ... விநாயகம் பாப்பா என்றே அழைப்பான் ...
சொல்ல முடியா ஓர் ஈர்ப்பு பொன்மனோகரியின் மேல் ஆதித்யனுக்கு ..அதே ஈர்ப்பு அவளுக்கும் அவனிடத்தே தோன்றியிருந்தது ……. கருவாய் சுமக்கும் போது தன் தாய் அதைத்தானே நினைத்து இருந்தாள் அதன் விளைவு தானோ என்னவோ ...?