அறைக்குள் வந்து கட்டிலில் படுத்த ஷ்ரேயான்ஷிற்கு அப்பா அம்மாவின் உரையாடல் மீண்டும் மனதினுள் ஓடியது.
அவளை போய் பார்க்க வேண்டும்! தீபாவிடம் அப்படி கோபமாக பேசியது தெரிந்திருந்தால் எப்படியும் அவன் மீது இருக்கும் கோபம் அதிகமாகி இருக்கும்.
இந்த வேலை முடிந்த உடன் அவளை போய் பார்க்க வேண்டும். பேச வேண்டும். முன்பு போல அவளுடன் நேரம் செலவிட வேண்டும்.
யோசித்தபடியே தூங்கி போனான்!
சென்னையை அடைந்த போது ரச்னாவினுள் கலவையான உணர்வுகள் தோன்றின. அவள் பிறந்து வளர்ந்த ஊர் இன்று ஏனோ அவளுக்கு அன்னியமாக தோன்றியது. ஆனாலும் ஒருமுறை நன்றாக காற்றை உள்ளிழுத்து, சுவாசித்து வெளியேற்றியவளுள் ஒரு மாதிரியான புத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
“நான் பேசலைனா என்னாகும்? அவ செத்துருவாளா? செத்தா சாகட்டும். ஐ டோன்ட் கேர். நான் ரொம்ப முக்கியமான மீட்டிங்க்கு ரெடி ஆகிட்டு இருக்கேன். டோன்ட் கால் மீ அகேயின்.”
தீபா சொன்னது போல மனதை திசை திருப்ப முயல வேண்டும்! பழைய நட்புக்களை சந்தித்து பேசுவது மனதை திசை திருப்ப உதவும்...!