அவர்கள் அவனைக் கண்டுகொள்ளாமல் பேசிக்கொண்டே வந்தனர். அவர்களைப் பொறுத்த வரையில் அவன் ஒரு ஜடம். அவனும் இங்கே நடப்பதை அன்பரசியிடம் போய் சொல்ல மாட்டான். போய் சொல்லி இருக்கும் நிம்மதியையும் குலைக்க வேண்டுமா? என்பது அவன் எண்ணம். ஆனால் அவனுக்கு தெரியாத ஒன்று இருக்கிறது.
கணவன் எப்படி நடந்துகொள்வான். என்ன செய்துகொண்டிருக்கிறான் என்று அவனுடன் வாழ்ந்து அவனைப்பற்றி நன்றாக புரிந்துவைத்திருந்த அன்பரசிக்கு தெரிந்துதான் இருந்தது. இருந்தும் அதை அவள் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்கிறாள். எல்லாமே அவள் பெற்ற பிள்ளகைளுக்காக.
தங்கள் பிள்ளைகள் மீது கணவனின் நோக்கம் என்ன என்று அவளுக்கு தெரியும்.
...
This story is now available on Chillzee KiMo.
...ாட ஒரு ஊரே இருக்கிறது என்பது மகளுக்கு தெரியுமா? என்ன?
எதையும் செய்யவிடாமல் தன் கையைக் கட்டிப்போட்ட காலத்தை அவள் கடிந்துகொண்டாள்.
“அக்கா! எந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டே?”
“அதுஜெயிக்கிறபோது தெரியும்.”
சாமர்த்தியமாக பதில் சொன்ன தமக்கையை முறைத்தான்.