(Reading time: 13 - 25 minutes)

ம்மவரின் நெருக்கத்தை அவர்களின் நெருக்கமின்றியும் உணர வைக்கும் ஒரே பந்தம் காதலாகும்!!!

எதையோ சிந்தித்தப்படி உலவிக்கொண்டிருந்தான் ராகுல்.

திடீரென ஏதோ உடையும் சப்தம் கேட்டது.திடுக்கிட்டு சப்தம் வந்த திசை நோக்கி நடந்தான்.

தீக்ஷா தலையை பிடித்தப்படி நின்றிருந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நீலாவின் "இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

"சதி!"

"ம்..."

"என்னாச்சு?"

"தெரியலைங்க...மயக்கமா இருக்கு!"-அவன் குழப்பத்தோடு அவளை பார்த்தான்.

"ஏன்?சாப்பிட்டது ஒத்துக்கலையா?"-அவள் பதில் பேசாமல் தள்ளாடி விழ போனாள்.

"ஏ...சதி!"-ராகுல் அவளை தாங்கினான்.

அவன் மனதில் ஒரு வித சந்தேகம் உதித்தது.

குளிர்சாதன பெட்டியை திறந்துப் பார்த்தான்.பார்த்தவன் திடுக்கிட்டான்.

"இதில் இருந்த தண்ணீர் பாட்டில் எங்கே?"-அவள் அந்த பாட்டிலை காண்பித்தாள்.அதிலிருந்ததை மொத்தமாக குடித்திருந்தாள் சதி.

"அடிப்பாவி!!!"-என்று வாயை பிளந்துவிட்டான் அவன்.இதிலிருந்து அதிலிருந்தது யாதென அறிந்திருப்பீர்கள்!!!

அவள் இன்னும் நிலை மறந்தாள்.

"ஏ...லூசு!உன்னை யாரு இதை குடிக்க சொன்னது!"

"டேய்!"-அவன் விழிகள் விரிந்தன.

"யாரை சொல்ற?"

"உன்னை தான்டா!"

"நானா?"

"நீ தான்!!"

"என்ன பேசுற நீ?நான் உன்னோட....""ஆ...என்னோட??சொல்லு...என்னோட!!"

"ஒண்ணுமில்லை...!"

"நீ உன் மனசுல என்ன நினைத்து கொண்டிருக்கிற? பெரிய தியாக சிகரம்னா?நானும் பார்க்கிறேன் எப்போ பார்த்தாலும் சிடுமூஞ்சி மாதிரியே சுத்துற!ஒரு போட்டோக்காவது சிரிப்பியா?"

"மனசுல இருக்கிறது எல்லாம் வெளியே வருது!"

"உன்னை தான்..."-என்று அவன் சட்டையை பற்றினாள் தீக்ஷா.

"5 வயசுல ஒர பொம்மைக்கு சண்டை போட்ட!கல்யாணத்துக்கு முன்னாடி கல்யாணத்தையே நிறுத்த சொன்ன!கல்யாணத்துக்கு அப்பறம் இல்லாத காரணத்துக்கு எல்லாம் சண்டை போடுற!என்ன உன்னை தட்டி கேட்க ஆளில்லைன்னு நினைப்பா!?"

"அப்படி எல்லாம் இல்லைம்மா!"

"என்னடா இல்லை??உனக்கு தெரியுமா எந்த அளவு நான் உன்னை காதலித்தேன்னு?"-உடனடியாக அவள் கண்கள் கலங்கின.

"நீ என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும்!அன்னிக்கு நம்ம கல்யாணத்தை நீ நிறுத்த சொன்ன போது மனதளவுல இறந்துட்டேன் நான்!"-அவன் அவளையே உற்றுப் பார்த்தான்.

"அன்னிக்கு ஏன்டா அப்படி ஒரு கேள்வி கேட்ட?எனக்கு உன்னைப் பற்றி தெரியாதா?சொல்லு!"

"சதி!!"

"பேசாதே!உன் எல்லா கஷ்டத்திலும்,சந்தோஷத்திலும் நான் இருக்கணும்னு நினைத்தேன்!ஆனா,உனக்கு என்னை பிடிக்கவே இல்லை!!"-அவள் பேச்சிழந்தாள்.

ராகுல் சிந்திக்காமல் அவளை அணைத்துக்கொண்டான்.

"உன்னை ரொம்ப பிடிக்கும் சதி!அன்னிக்கு நான் கேட்கும் போதே என்னை சட்டையை பிடித்து கேட்டு இருக்கலாம்ல???என் நம்பிக்கையே நீதான்!!!நீ இல்லாமல் எப்படி வாழ்வேன்?உனக்காக தான் நான் என்னையே மாற்றினேன்!நீ இல்லாம என்னால இருக்க முடியாது சதி!!"-மனதில் இருப்பதை எல்லாம் கூறி முடித்தான் அவன்.

"சதி!"

"..........."

"சதி!"-அவள் அவன் மீது சாய்ந்தப்படியே உறங்கி விட்டிருந்தாள்.அவன் மொழிகளை எதையும் அவள் கவனிக்கவில்லை.

ஒரு புன்னகை பூத்தப்படி,

"இப்போ யாரு சொல்றதை கேட்க மாட்றாங்க?"என்றான்.

அவளை தூக்கி சென்று உறங்க வைத்தான்.

"லூசு!"என்று அவளைப் பார்த்து கூறிவிட்டு,அவளுக்கு போர்த்திவிட்டு நகர்ந்தான்.

றுநாள் காலை....

கண்விழித்தவளின் தலையில் கனத்தை வைத்து தைத்தது போன்ற உணர்வு!!!அவ்வளவு வலி!!!

"காபி?"-என்று காப்பி கோப்பையை நீட்டினான் ராகுல்.அவள் விசித்ரமாய் அவனை பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.