"என்ன நீங்க போய் காப்பி போட்டு!!!"
"நீ தூங்கிட்டு இருந்த அதான்..."-என்று வேறு கோப்பையில் இருந்த தேநீரை பருகினான்.
அவள் கண்களை அழுத்தி மூடி திறந்தாள்.
"என்ன தலைவலியா?"
"ம்..."
"எனக்கும் முதல்முறை அப்படி தான் இருந்தது!"
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...
படிக்க தவறாதீர்கள்...
"என்னது?"
"முதல்முறையா விஜய்,கார்த்திக் கூட சேர்ந்து திருட்டுத்தனமா குடித்த போது!"-அவள் சற்று கோபமாய் பார்த்தாள்.
"அதை ஏன் நான் குடித்த மாதிரி என்கிட்ட சொல்றீங்க?"
"என்னது?மாதிரியா?அடிப்பாவி...நேற்று நடந்தது எதுவும் உனக்கு ஞாபகமில்லையா?"
"என்ன நடந்தது?"
"நேற்று மேடம் நல்லா குடித்துவிட்டு என்னை என்ன ஏக வசனத்துல எல்லாம் திட்டின தெரியுமா?"
"நானா?"
"பின்ன...எப்படி?எப்படி?நான் சிடுமூஞ்சியா?ஒரு போட்டோக்கு கூட சிரிக்க மாட்டேனோ!"
"நான் எப்போங்க சொன்னேன்?"
"உன்னை கொன்னுடுவேன்!என் அம்மாக்கிட்ட கூட நான் அப்படி திட்டு வாங்கிருக்க மாட்டேன்!உன்கிட்ட இனி பேசும் போது ஜாக்கிரதையா பேசணும்!!விட்டா அடித்துவிடுவ போலயே!!!"-அவளுக்கு விவரம் புரிந்தது.
"வேற என்ன சொன்னேன்!"-அவள் மனதில் ஒருவித தயக்கம்!!ராகுல் சில நொடிகள் அவளையே பார்த்தான்.
"வேற எதுவும் திட்டலை!அப்பறம் நீ தூங்கிட்ட!!"
"ஸாரிங்க!நான் ஏதோ தெரியாம!!!!"
"இப்போ நான் உன் மேலே கோபப்பட்டேனா!"-அவள் இல்ல என்று தலையசைத்தாள்.
"அப்பறம் எதுக்கு ஸாரி?நமக்குள்ள ஸாரிக்கு அவசியம் இருக்காதுன்னு தோணுது!நீ அதை நமக்குள்ள அனுமதிக்க போறீயா?"-அவன் பேசுவது அவளுக்கு சுத்தமாய் விளங்கவில்லை.
"சரி...உனக்கு வேணும்னா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு!கொஞ்ச நேரம் கழித்து எழுப்புறேன்!"
"இல்லை...நேரமாயிடுச்சு!"-அவள் எழுந்து சென்றாள்.
"காலையில எல்லாம் நல்ல பத்தினியாக தான் இருக்கா!ராத்திரி தான் பத்ரகாளியா மாறிடுறா!"-என்று மனதளவில் எண்ணி புன்னகைத்தான் ராகுல்.
தொடரும்
{kunena_discuss:877}