(Reading time: 23 - 45 minutes)

ன்ன மகி ஆர் யு ஆல்ரைட்..?

ராம் நீங்க ரெண்டு பேரும் இருக்குறப்போ எனக்கென்ன நா நல்லா தான் இருக்கேன்,

இல்ல மகிம்மா எனக்கென்னவோ தேவையில்லாம உன்ன இதுல இழுத்துட்டோமோநு தோனுது..-பரணி..

அண்ணா நீங்களுமா??

இருவரும் மௌனம் காத்தனர்..சரி இந்த பீலிங்க்ஸ்லா அப்பறம் குடுக்கலாம்..ரெண்டு பேரும் விஷயத்துக்கு வாங்க,ரெக்கார்டிங் கேட்டீங்களா?

ம்ம் கேட்டோம்டா ஆனா ஏன் உடனே பேச வேண்டாம்நு சொன்ன??-பரணி..

எனக்கென்னவோ ஆபீஸ்ல தான் நம்மள ட்ரேஸ் பண்றாங்கநு தோனுது..இல்லனா அதெப்படி கரெக்ட்டா நா சீட்க்கு போன அப்புறம் கால் பண்ணமுடியும்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

இல்ல மகி அது கஷ்வல்லா கூட நடந்திருக்கலாம்ல…--ராம்

இருக்கலாம் ராம் பட் எனக்கு கால் வந்த ரெண்டு தடவையுமே நா ஆபீஸ்ல இருக்கும் போதுதான்..அதுவும் என் கூட யாரும் இல்லாத அப்போதான்..அதனால தான் டவுட்டா இருக்கு…

ம்ம்ம் நீ சொல்றதும் கரெக்ட் தான்..பட் உன்கிட்ட பேசி என்ன ஆகப்போகுது..-ராம்..

சிம்பிள் ராம் ஒண்ணு எனக்காக நீங்க இந்த கேஸ்ஸ விட்டுறுவீங்க இல்ல நா பயந்து உங்களை இதிலிருந்து விலக வச்சுடுவேன்..வேறென்ன..

அது சரிடா பட் அவங்களுக்கு இன்னும் இவன் யாருன்னு தெரியாதுடா..சின்னதா சந்தேகம்தான் வந்தது அதுக்காக தான் இங்க அனுப்பி வச்சுட்டாங்க..

சிறிது நேரம் ஏதோ யோசித்தவள்..அப்போ ஏன் இப்படி இருக்கக்கூடாது??ராமை அவங்களுக்கு தெரியும்நு சொல்றீங்க..சோ அவர் உண்மையாவே இங்க வொர்க் பண்றாரா இல்ல ஜஸ்ட் ஐ வாஷ்க்காநு இவ்ளோ நாள் கண்காணிச்சுருக்கலாம்..அதுவும் ஆபீஸ்லயே,ஏன்னா இவரு மேல சந்தேகம்னா கண்டிப்பா போலீஸ்ஸோநு தான் யோசிச்சுருப்பாங்க..ப்ரைவேட் டிடெக்டிவ்ஸ் யாரும் இவ்ளோ பெரிய இடத்துல நுழையமாட்டாங்கநு அவங்க திங்கிங்கா இருக்கலாம்..அப்படி நீங்க போலீஸ் டிபார்ட்மென்ட்ங்கிற பட்சத்துல உங்கள பப்ளிக்காவோ உங்க வீட்டுலயோ கண்காணிச்சா மாட்டிப்போமோநு பயந்திருக்கலாம்..ஏன்னா இது அவங்க இடம் இல்ல..உங்களைபத்தி எப்படி தெரிஞ்சுக்கிறதுநு யோசிக்குறப்போ தான் நா வந்துருக்கேன்..அதுவும் போக நீங்களும் வேலையை விட்டு நின்னது பயம் குடுத்துருக்கும்,சோ என்ன வச்சு உங்கள ப்ளாக் பண்ண பாக்குறாங்க..சொல்லிவிட்டு பதிலுக்காக பார்த்தவள்,இருவரும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை பார்த்து என்னவென்று கேட்டாள்..

மகி உன்ன குட்டிப் பொண்ணுனு நெனைச்சேன்..ஆனா உனக்குள்ளையும் ஒரு சிஐடி சங்கர் ஒளிஞ்சிருந்திருக்கார் பாரேன் என்று திருஷ்டி சுத்தினான் பரணி..

டேபிளில் இருந்த மெனுகார்டை எடுத்து அவன் முதுகில் நாலு அடி போட்டவள்,போண்ணா உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாமேநு பாத்தா என்னையே கலாய்க்குறீங்க பாத்தீங்களா,போங்க நா கிளம்புறேன் என்றபடி வேகமாக எழுந்தாள்..அவ்வளவு நேரம் சிரித்துக் கொண்டிருந்த ராம் சட்டென அவள் கைப்பற்றி அமர வைத்தான்..

ஹே குட்டிமா அவன்தான் ஏதோ விளையாடுறான்னா நீயும் சீரியஸா எடுத்துகிட்டு..ஜோக்ஸ் அப்பார்ட் நீ சொல்ற அங்கிள் கரெக்ட்டா தான் இருக்கு பட் 100% சொல்லிட முடியாது,ஏன்னா நம்ம கல்யாண விஷயம் எப்படி தெரிஞ்சுருக்கும்??

என் கெஸ்படி ஆபீஸ்ல இருக்குற ஸ்பை ஒரு கேள்..பிகாஸ் நா நம்ம விஷயத்தைபத்தி ரெஸ்ட் ரூம்ல வச்சு தான் திவ்யாட்ட பேசிட்டு இருந்தேன்..அப்போ உள்ளே..என்று நினைவுபடுத்த முயன்றாள்..ஆங் ஒரு மூணு பேர் இருந்தாங்க பட் நம்ம டீம் இல்ல..பேஸ்ல்லா பாக்கல பட் இப்போ லிங் பண்ணி பாத்தா இதுதான் ரூட் காஸ்நு தோனுது..

ம்ம்ம் சரி நீ எதை நினைச்சும் கவலைப்பட்டுகாதடா..சீக்கிரம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுடும் – பரணி.,

ம்ம்ம் சரிண்ணா,

ராமை நோக்கியவனுக்கு அவனின் தவிப்பு புரிந்தது..இருவரும் பேசட்டும் என்று நீங்க பேசிட்டு இருங்க எனக்கு பக்கத்துல வேலையிருக்கு 10 மினிட்ஸ்ல வந்துட்றேன் என்றுகூறி பதிலுக்கு காத்திராமல் சென்றான்,அவன் சென்றதுதான் தாமதம் ராம் மகியின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான்..உனக்கு நிஜமாவே பயமில்லையா குட்டிமா???

நிச்சயம் பயமிருக்கு ராம்…எனக்கு எதுவும் ஆயிடுமோநு இல்ல,இந்த கேஸ்ஸை நீங்க சக்சஸ்புல்லா முடிக்கனுமேநு தான்,

தன்னவளை மெச்சுதலாக ஒரு பார்வை பார்த்தான்..நிஜமா நீ இவ்ளோ தைரியமானவனு நா நினைக்கலடா அப்படி தெரிஞ்சுருந்தா முதல்லயே எல்லாத்தையும் சொல்லிருப்பேன்.சரி விடு பழசை பேச வேணாம்,ஆமா ஆன்ட்டி இன்னும் டூ டேஸ்ல வராங்கல??நீ இல்லாம அவங்களை எங்கும் அனுப்பிடாத மகி..ஆன்ட்டி வர மறுநாள் நாள் நல்லாயிருக்காம் சோ அன்னைக்கு மேரேஜ் ட்ரெஸ் எடுக்க போலாம்நு அம்மா சொன்னாங்க….அண்ட் டூ டேஸ்ல இன்விடேஷனும் வந்துரும்டா..

ஓ.ஓ.கே ராம் நீங்க வருவீங்களா??

வருவேனாவா??நா ஓ.கே பண்றதுதான் உன் கல்யாண ட்ரெஸ்ஸே..

ம்ம்ம் ஓ.கே என மென்மையாக சிரித்தாள்,பரணியும் வந்துவிட அவளை ஹாஸ்ட்டலில் இறக்கிவிட்டு இருவரும் ராமின் வீட்டை அடைந்தனர்…அலுவலக அறைக்குச் சென்று ACPயை மொபைலில் அழைத்தனர்..அவரிடம் நடந்ததை கூறியவர்கள்..மகி கூறியதையும் கூறினார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.