"ஒருவேளை நவி சொல்றா மாதிரி ரெண்டுபேரும் லவ் தான் பண்றாங்களோ... அப்படி என்ன தான் நடந்திருக்கும் இவங்களுக்குள்ள..?? கொஞ்ச நாள் கவனிப்போம் ரெண்டுபேரும் என்ன தான் செய்றாங்கன்னு..." என்று நிகேதன் யோசித்தான்.
ஜெய்க்குட்டியோடு சிறிது நேரம் உறங்கிய நீரஜா கொஞ்சம் ஃப்ரஷ் ஆகி வெள்ளை நிற ஃபுல் சுடிதாரில் தயாராகி கொண்டிருந்தாள்... பொதுவாக அவள் வழக்கமாக உடுத்துவது டாப், ஜீன்ஸ், லெகிங்ஸ், ஃபுல் ஸ்கர்ட் அது போன்ற உடைகள் தான்... சுடிதாரெல்லாம் ஏதாவது பங்ஷனுக்கு தான்... புடவை என்ற ஒன்றின் பக்கம் கூட போகமாட்டாள்... இப்போது அவள் சுடிதார் போட்டதே அம்பிகா ஆன்டிக்காக... அவர்கள் சஞ்சயின் அம்மா... அவர்களை பார்க்க தான் இப்போது அவள் தயாராகி கொண்டிருக்கிறாள்.
அவர்களுக்கு பு
...
This story is now available on Chillzee KiMo.
...
க இருந்தது.
அவனது அறையின் பால்கனி வீட்டின் வெளிக் கேட்டை பார்த்தாற் போல் இருக்கும்... அந்த கேட்டிலிருந்து வீட்டிற்கு வர கொஞ்சம் நடந்து வர வேண்டியிருக்கும்... இரண்டு பக்கம் தோட்டமும் நடுவில் நடைபாதையும் அமைந்திருக்கும்... அந்த தோட்டத்தை தான் சஞ்சய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்...