சரணுடன் பாண்டியன் வந்துவிட,”அப்பா”என்று அவரை அணைத்துக்கொண்டு கதறிவிட்டாள்.
சரண் யஸ்வந்த்துக்காக தான் அழுகிறாள் போல என்று நினைத்துக்கொண்டிருக்க,அதை பொய்யாக்கும் விதமாக பேசினாள்.
ஏனென்றால் யஸ்வந்த்திற்கு ஆபத்தாக எதுவும் இல்லை என்ற உடனே கொஞ்சம் நார்மலாகிவிட்டாள்.
“இந்த ஊர்ல பத்து மணிக்கு மேல பொண்ணுங்க தனியா நடக்க கூட முடியறதில்ல..அந்த அளவுக்கு நாங்க என்ன பாவம் பண்ணோம்.பொண்ணுங்கன்னா,ஆறு மணிக்குள்ள வீட்டுக்குள்ள போய் அடைஞ்சிடனுமா..இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சு எத்தனையோ வருஷம் ஆனாலும்,பொண்ணுங்களுக்கு மட்டும் அந்த சுதந்திரம் இன்னும் கிடைக்கவேயில்லையே”என்று பெண்ணுரிமைக்காக பேசி அழுது கொண்டிருந்தாள்.
“எல்லாருமே ஒரே மாதிரி இல்லடா குட்டிமா”என்று அவளை ஆறுதல்படுத்திய பாண்டியன்,
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்
படிக்க தவறாதீர்கள்...
“அந்த தம்பி முழிச்சதும் நன்றி சொல்லிட்டு நாம கிளம்பலாம்..உன்னால கண் முழிச்சிருக்க முடியும் தானே”என்று மகளை கேட்க,சரண் தலையிலையே அடித்துக்கொண்டான்.
‘சின்னக் குழந்தை..தூக்கம் வருதுன்னு சொன்னா,தாலாட்டு கூட பாடுவார் போல..நல்லவேளை என் மாமனார் அப்படியில்ல..இப்படியெல்லாம் பாசம் காட்டி என்னை தொந்தரவு பண்ண மாட்டார்’என்று நிம்மதியடைந்தான்.
அவனது கவலை அவனுக்கு!!
“நீ எங்கடா போயிருந்த”என்று பாண்டியன் அதட்டவும் பயந்து போய்விட்டான்.
உண்மையை சொல்ல முடியாமல்,அவசரமாக சுண்டுவிரலை காட்ட,”கருமம்”என்று தலையில் அடித்துக்கொண்டு யஸ்வந்த்தை பார்க்க போய்விட்டார்.
அவன் இன்னும் கண் விழிக்காததால்,வெளியே வந்து அமர்ந்துவிட,சரண் மட்டும் உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்தான்.
சிறிது நேரத்தில் தாமரையும் குமாரும் வந்துவிட,பதட்டுப்படுவதற்கு எதுவுமில்லை என்று அவர்களை அமரவைத்து ஆறுதல்படுத்திவிட்டு தான் உள்ளே அழைத்துக்கொண்டு போனான்.
அவர்கள் உள்ளே செல்லும் போது,யஸ்வந்த் முழித்திருக்க,அவந்திகா அவனுடைய கண்ணாடியை எடுத்து துப்பட்டாவில் துடைத்துவிட்டு அவனுக்கு போட்டுவிட்டுக் கொண்டிருந்தாள்.
அவனும் மறுக்கவில்லை என்பதை உணர்ந்த தாமரை ஆச்சர்யமாக பார்க்க,அவர்களை பார்த்துவிட்டவள் அங்கிருந்து வெளியே செல்லும் முன்,”யஷுக்கு சீக்கிரம் சரியாகிடும்னு டாக்டர் சொல்லிட்டுப் போனாங்க”என்று தாமரை அழைப்பதைப் போலவே அவளும் அவன் பெயரை சுருக்கி அழைத்து விபரத்தை சொல்லிவிட்டு வெளியே செல்ல,பெற்றவர்கள் இருவரும் ஆச்சர்யத்துடன் மகனை பார்க்க,அவனோ கண் சிமிட்டி சிரித்தான்.
தன்னைப் போலவே அவளது செய்கையும் இருக்க,மகனுக்கு திருமண யோகம் வந்துவிட்டதோ என்று தாமரை சந்தோஷப்பட்டார்.
அவருக்கு ஒன்று தெரியவில்லை.அவந்திகாவிற்கு வேண்டுமானால் தற்போது திருமண திருமண யோகம் இருக்கலாம்.ஆனால் யஸ்வந்திற்க்கு இல்லை என்பதை உணர்த்தும் விதமாக,மும்பையில் தன்னுடைய பிரம்மாண்டமான வீட்டில் ஒருவன், ”Am gonna kidnap her..Am gonna kidnap her”என்பதையே ராகமாக பாடிக்கொண்டு, வெஸ்டர்ன் ஸ்டைலில் ஆடிக்கொண்டிருந்தான்.
தொடரும்
{kunena_discuss:1004}