(Reading time: 9 - 17 minutes)

''நான் ஏதாவது பண்ணிப்பேன்னு பயப்படரீங்களா நரேன் , பண்ண மாட்டேன் , உங்களை ஏதாவது பண்ணிட போறேன்னு தான் இங்க வந்தேன்'' என்றாள் 

அந்த நேரத்திலும் சிரிப்பு வந்தது அவனுக்கு ,லேசாய் தலையை அந்த கதவில் முட்டி மறுபடியும் கூப்பிட ஆரம்பித்தான் 

''நிவி வெளில வா , நாம வீட்டுக்கு பேசுவோம் ,அவங்க இப்போ வீட்டுக்கு போயிருப்பாங்க..

வீட்டுக்கு பேச உங்க உதவி தேவை இல்லை நீங்க போகலாம்'' என்றாள் சத்தமாக 

அப்போதுதான் தான் இன்னும் ஈர துண்டுடன் நிற்பதை உணர்ந்து சரி அதை மாத்தி விட்டு வரலாம் என ரூமுக்கு திரும்பி போனான் 

அங்கே அவசரமாய் கிடைத்த உடையை மாற்றி முடித்த போது தான் அவள் போன் மெத்தையில் கிடப்பதை பார்த்தான் , 

இது இங்கிருக்க எதில் பேசுவா

...
This story is now available on Chillzee KiMo.
...

துணை கொண்டு தான் அம்மா இந்த நிலையை சமாளிக்கறாள் , மற்றபடி அவளுக்கும் இது வெகு கஷ்டமான விஷயம் என்பது நிவிக்கு உரைத்தது 

மேலும் எப்போதும் அம்மாவின் பேச்சு நம்பிக்கை தருவதை போல் இப்போதும் ஒரு தெம்பு மனதில் வருவதை நிவி உணர்ந்தாள் 

''ஆஞ்சியோ எடுத்த பின் என்ன சொன்னாங்கமா'' என்றாள் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.