அறையில் தனக்கு தானே சிரித்துக்கொண்டிருந்த அர்னவின் கழுத்தை கட்டிக்கொண்டு,
“என்ன மாமா நீயே சிரிச்சிக்குற?...” என பிரேமிதா கேட்டதும்,
“ஒன்னுமில்லடா… சும்மா பழைய நியாபகம்…” என்றான் அவன்…
“பழைய நியாபகமா?...” என விழிகளை உருட்டியவளிடம்,
“ஆமாடா குட்டி…” என அவனும் அவளிடம் செல்லம் கொஞ்ச,
“மாமா… நீ நிஜமாவே என்னை தான் கல்யாணம் பண்ணிப்பியா?...” என்று கேட்டாள் அவள் அவனின் சட்டை பட்டனை திருகியபடி…
அவளின் கேள்வியில் தன்னை மறந்து சிரித்தவன், “என் பிரேமி குட்டிக்கு என்ன திடீர்னு இவ்வளவு பெரிய டவுட்?...”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
“அது… நீ ரொம்ப பெரிய பையனா இருக்குற?... நான் குட்டிப்பொண்ணா இருக்குறேனே… அதான்…”
“ஓஹோ… அப்போ குட்டிப்பொண்ணை சீக்கிரம் வளர வச்சிடலாமா?...”
“வளர்ந்துடுவனா மாமா?!!!!......”
“நிச்சயமாடா…..”
“எப்படி மாமா?...”
“அதுவா… வா சொல்லுறேன்…” என அவளை தூக்கிக்கொண்டு சமையலறைக்குள் அவன் நுழைய, அங்கே பாத்திரத்தை கழுவிக்கொண்டிருந்தாள் விசாலம்..
“என்ன தம்பி… எதும் வேணுமா?...” என அவனைப் பார்த்ததும், விளக்கிக்கொண்டிருந்த பாத்திரத்தினை சிங்கினிள் போட்டுவிட்டு கையை கழுவிவிட்டு வந்தவளிடம்,
“பிரேமிக்கு சாப்பாடு கொடுக்க வந்தேன்… நான் பார்த்துக்கறேன்… நீங்க போங்க…” என்றான் அவன்…
“உங்களுக்கு எதுக்கு தம்பி சிரமம்?... நீங்க பாப்பாவை டைனிங்க் டேபிளுக்கு கூட்டிட்டு போங்க… நான் எல்லாத்தையும் எடுத்துட்டு வரேன்…”
“இல்லங்க… பரவாயில்லை… நானே எடுத்துட்டு போறேன்…”
“வீட்டுக்கு வந்த விருந்தாளியை வேலை செய்ய விட்டா நல்லாவா இருக்கும்?... நான் தான் சொல்லுறேன்ல தம்பி… நீங்க போங்க… நான் எடுத்துட்டு வரேன்…” என விடாப்பிடியாக விசாலம் பேச, அவனும் வேறு வழியின்றி அங்கிருந்து நகர்ந்தான்…
அவன் சென்றதும், சாப்பாடு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவள் டைனிங்க் டேபிளுக்கு வர, அந்த நேரம் சரியாக திலீப்பும் வந்து சேர்ந்தான்…
“வாங்க தம்பி… கையை கழுவிட்டு வாங்க… சாப்பாடு எடுத்து வைக்குறேன்…” என விசாலம் வரவேற்க, கண்டும் காணாதது போல் அர்னவ் பிரேமிதாவுடன் கதை பேசிக்கொண்டிருந்தான்…
“ஹ்ம்ம்…” என தலை ஆட்டியவனின் பார்வை விசாலத்தை அடுத்து, அங்கிருந்த அர்னவ், பிரேமிதாவின் மீது பதிந்து, அடுத்ததாக தனனவளைத் தேடியது…
ஓடி வந்து காலைக்கட்டிக்கொண்ட பூஜாவிடம், “அப்பா அழுக்கா இருக்குறேன்… இரு ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்… என்ன?...” என கேட்க அவளும் சரி என்றாள்..
மகளின் கன்னம் தொட்டு சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றவன், விரைந்து மாடிப்பறி ஏறினான்…
அவன் தேடல் பொய்க்கவில்லை என்பது அங்கு சென்ற பின்னர் உணர்ந்து கொண்டான்…
ஜன்னலின் ஓரம் நின்று கொண்டு சுவரில் சாய்ந்தபடி, அவனது புகைப்படத்தை கையில் வைத்து பார்த்துக்கொண்டிருந்தவளை பின்னிருந்து அணைத்துக்கொண்டான் அவளின் அருமைக்கணவன் திலீப்…
காய்ச்சல் வந்த உடம்பில் இருந்த அயர்வு வார்த்தையாகி “ஆ…” என வெளிவர,
“என்னடி இன்னும் முடியலையா?... வலிக்குதா….” என அவளின் முன் வந்து கேட்டான் அவன்…
“இல்லை…” என தலை ஆட்டியவளின் முகத்தினை நிமிர்த்தி அவன் பார்க்க, அவள் முகத்தில் சற்றே சோர்வு தெரிந்தது…
“உன்னை நான் தூங்க சொன்னேன்ல… ஆனா நீ தூங்கலை அப்படித்தான?... பாரு… உன் முகமே சரியில்லை… நீ நல்லா தூங்கி எழுந்திருந்தா இந்நேரம் சரி ஆகியிருக்கும்.. நீதான் நான் சொன்னப் பேச்சை கேட்க மாட்டியே…” என அவன் அவளை விட்டு விலக, அவளுக்கு இப்போது தான் அதிகம் வலித்தது…
இப்படியே பேசாமல் இருந்தால், அவன் அடுத்தடுத்து ஆடத் தயாராகி விடுவான் என தெரிந்து கொண்டவள், அவனின் கோபத்தை மாற்ற எண்ணினாள்… அவனின் வழியில் சென்றுதான் அவனை சரிசெய்ய முடியுமென்பதை உணர்ந்து கொண்டவள், அதை செயல்படுத்த துவங்கினாள்…
“சாரிங்க…” என்றபடி அவளுக்கு முதுகு காட்டி நின்றவனின் தோள் மீது அவள் கைவைக்க, அவன் அசையாதிருந்தான்…
“நிஜமா… தூங்கினேன்… ரொம்ப நேரம்…” என அவள் அவனை திருப்பி சொல்ல, அவன் வேறு எங்கேயோ பார்த்தான்…
“இன்னும் கோபம் போகலையா?...”
“……..’
“சரி… நான் போறேன்…” என அவள் நகர்ந்த போது, அவள் கைப்பிடித்து தடுத்தான் அவன்… “எங்கடீ போற?...” என…
உதட்டில் பரவிய சின்ன சிரிப்பை மறைத்துக்கொண்டு அவள் அசையாதிருக்க, அவன் அவள் கைகளை இறுக பற்றிக்கொண்டான்…