(Reading time: 14 - 27 minutes)

லிக்குதாடீ?...”

“…………….”

பதில் சொல்லுடீ…. வலிக்குதா…” என கேட்டவன் அவளை இழுத்தணைக்க, அவள் பேசாதிருந்தாள்

கண்ணை மூடி வலியை உணர்ந்தவள், வெளியே அதைக் காட்டாது நிற்க,

சாரிடிகாலையில உன் மேல கோப்பட்டு போயிட்டேன்ஆனா அதுக்கெல்லாம் காரணம், உன்னை விட்டு நான் விலகி நிற்கவேண்டி வந்துருச்சேன்னு தான்…”

“…………..”

உடம்பு சரியில்லன்னா நான் கைப்பிடிச்சா கூட வலிக்கும்அப்புறம் எப்படி உன்னை இப்படி கட்டிக்கிறது?...” என மெதுவாக அவளை மீண்டும் இடையோடு சேர்த்தணைக்க, அவள் அப்படியே அவனுடன் ஒன்றி போனாள்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மனோஹரியின் "காதல் பின்னது உலகு" - கல்யாணமாம் கல்யாணம்…

படிக்க தவறாதீர்கள்...

எனக்கு புரியுதுடி உன் நிலைமைஆனா என்னால உன்னை விட்டு விலகி இருக்கவே முடியலைஅதுக்குத்தான் உன்னை உன் அம்மா வீட்டுக்கு கூட அனுப்ப எனக்கு மனசில்லைநீ அங்க போனதும் இந்த ரூமுக்குள்ள நான் மட்டும் தனியா எப்படிடீ இருப்பேன்எங்க பார்த்தாலும் எனக்கு உன் நியாபகம் தான் வருதுஅப்புறம் என்னால எப்படி நீ இல்லாம இருக்க முடியும்?...”

“……………”

இவன் இப்படித்தான் பேசுவான்ஆனா கடைசியில திட்டவும் செய்வான்னு நீ நினைக்குறதும் என்னால புரிஞ்சிக்க முடியுதுஎன்னடீ பண்ண?... நான் உங்கிட்ட பேசணும்னு நினைக்குற நேரத்துல நீ வேற யார்கிட்ட பேசினாலும் எனக்கு கோபம் வருதுஎனக்கே எனக்கானவ நீன்னு மனசு கூப்பாடு போடுதேஅதை என்ன செஞ்சு என் வழிக்கு கொண்டு வரன்னு எனக்கு தெரியலை சரயூஎனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் சரயூஉன்னை மட்டும் தான் பிடிக்கும்அது உனக்கும் தெரியும்அதே மாதிரி உனக்கும் என்னை பிடிக்கும் ரொம்பவேஆனா என்னை மாதிரியே உன் அம்மா,அப்பா,தம்பி, ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் உனக்கு பிடிச்சிருக்குஅது எனக்கும் தெரியும்தெரிஞ்சும் என்ன செய்ய, அது என் புத்திக்கு புரிஞ்சாலும் மனசுக்கு புரிய மாட்டேங்குதுடிஅப்படிப்பட்ட நேரத்துல நான் என்ன செய்யுறேன்னு எனக்கே தெரியலைஉன்னை ரொம்ப காயப்படுத்துறேன்னு மட்டும் புரியும் நான் தனியா உட்கார்ந்து யோசிக்கும்போதுஆனாலும் என்னால அதை மாத்திக்கமுடியலைஉன்னை கோபத்துல திட்டத்தான் தோணுதுஅப்படி திட்டிடுறதால தான் அந்த கோபமும் அப்பவே மறைஞ்சு போயிடுதுஇல்லன்னா அடுத்து உன்னைப் பார்க்கும்போது  நீ என்னைவிட்டு விலகி போயிட்டே இருக்குறன்னு தோண ஆரம்பிச்சிடுது சரயூ…”

“………….”

ப்ளீஸ் சரயூஎன்னை வெறுத்துட மாட்டல்ல நீ?... என்னை விட்டு விலகிட மாட்டல்ல?...” என்றவனது குரலில் வெளிப்படையான தடுமாற்றம் தெரிய,

விழி விரிய அவனின் முகத்தினைப் பார்த்தவளுக்கு, கண்கள் கலங்கியது

எதுக்குடி அழற?... வலிக்குதா ரொம்ப?... நான் கையை எடுத்துடுறேண்டி…” என அவன் அவள் இடையிலிருந்து கைகளை எடுத்துக்கொள்ள,

அதற்குமேலும் பொறுக்காமல் அவனின் மார்பில் தஞ்சம் புகுந்தாள் அவள்

திலீப்…………” என்ற அவளது கேவல், அவனின் நெஞ்சில் கேட்க,

என்னம்மா?...” என்றபடி அவளது முகம் நிமிர்த்தினான் அவன்

கலங்கியிருந்த அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, அதை அழுத்தி துடைத்தவன்,

இப்போ எதுக்கு நீ அழற?... அழுது மறுபடியும் உனக்கு உடம்பு சரியில்லாம போறதுக்கா?...” என அவன் முறைக்க, அவளிடம் சின்ன சிரிப்பு எட்டிப்பார்த்தது

எதுக்குடி சிரிக்குற?...”

இல்ல உடம்பு சரியில்லாம போனா மட்டும் சும்மா விட்டுடுற மாதிரிதான்….” என அவள் மெல்ல சொல்ல,

ஹ்ம்ம்எனக்கு உன்னை கட்டிப்பிடிச்சிக்காம, இருக்கவே முடியாதுடீஏனோ தெரியலைபழகிட்டு எனக்கு, உன்னை கல்யாணம் பண்ணின நாளிலிருந்து…” என்றவனும் அவளை அணைத்துக்கொண்டே சொல்ல, அவள் சிரிப்பு இப்போது தெளிவாய் கேட்டது அவனுக்கு

இங்க நான் ஃபீலிங்க்ஸோட சொல்லுறேன்நீ சிரிக்குறீயா?... உன்னை என்ன பண்ணுறேன் பாரு…” என்றவன் அவள் முகம் ஏந்தி முத்தங்கள் கொடுக்க அவள் அப்படியே அவனுள் புதைந்தாள்

சில நிமிடங்கள் கழித்து அவளை விடுவித்தவன், “சாரி சரயூநீ என் பக்கத்துல இருந்தா நான் என்ன செய்யுறேன்னே எனக்கு தெரியலை…” என சொல்ல,

இல்லாட்டாலும் ரொம்ப சமத்து தான் நீங்க…” என்றபடியே அறை வாசலின் பக்கம் சென்றாள் அவள்

அப்போ என்னை சமத்தா பார்க்கணுமா?...” என அவன் கண்ணடித்து கேட்க,

அய்ய்ய்யோ திரும்பவும் முதலில் இருந்தாநான் வரலைப்பா இந்த ஆட்டத்துக்குஆளைவிடுங்க…” என கையெடுத்து அவள் கும்பிடவும்,

எது வரலையா?...” என அவனும் அவளை துரத்த எத்தனிக்க, அவள் சட்டென அறையை விட்டு வெளியேறினாள் சிரித்தபடி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.