பூஜாவினையும், பிரேமியையும் சாப்பிட வைத்து விளையாட அனுப்பிவிட்டு அர்னவ் எழுந்த போது அங்கே வந்து கொண்டிருந்தாள் சரயூ…
“என்ன சிஸ்?... இந்த மாசம் கரண்ட் பில் கட்டா?...” என அவன் கேட்க, அவள் விழித்தாள்…
“என்னடா உளறுற?..”
“எது?... உளறலா?... அப்படித்தான் தோணும் உங்களுக்கு…”
“ஏன் இப்போ என்ன நடந்துச்சு?...”
“என்ன நடந்துச்சா?... பார்த்த எனக்கு தான தெரியும்…”
“என்னத்தடா அப்படி பார்த்து கிழிச்ச நீ?..”
“அது சரி… 1000வாட்ஸ் பல்ப் பிரகாசமா உங்க முகத்துல மின்னுச்சே… அதைவிட அதிகமா தலைக்கு பின்னாடி ஒரு பெரிய ஒளிவட்டம் வேற… ஒருமாசத்துக்கு அதை வச்சு ஒப்பேத்திடலாமே… ஹ்ம்ம்… கலக்குறீங்க சிஸ்… அப்போ மாமாக்கு கரண்ட் பில் கட்டத் தேவையே இல்ல இந்த மாசம்… அப்படித்தானே…” என அவன் கிண்டலடிக்க,
அங்கிருந்த கரண்டி ஒன்றை எடுத்து அவனை அடிக்க கை ஓங்கினாள் அவள்…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
புவனேஸ்வரியின் "தமிழுக்கு புகழென்று பேர்..." - நட்பும் காதலும் கலந்த தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
“சிஸ்… திஸ் இஸ் டூ மச்… நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஆயுதம் எல்லாம் கையில எடுக்குறீங்க?... சுதந்திர நாட்டுல ஒரு கருத்து கூட சொல்ல எனக்கு உரிமை இல்லையா?..”
“ஏண்டா இது ஆயுதமா?... அப்போ ஊரில் அம்மாகிட்ட பலவித கரண்டியால அடி வாங்கினியே அதெல்லாம் என்னது ராஜா?...”
“சிஸ்… வாழ்க்கைன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்… அதை எல்லாம் பார்த்தா முடியுமா?...” என கைகளை ஆட்டிக்கொண்டே சொல்ல,
“உன்னை…...” என்றபடியே அவனை நாலு அடிபோட்டாள் அவள்…
அவள் அடிக்கும் வரை பொறுமையாக இருந்தவன், “முடிஞ்சதா?... இந்த அடிக்குத்தானா இவ்வளவும்?.....” எனக் கேட்க
“டேய்… வாங்கினது பத்தலையா உனக்கு?..” என மிரட்டினாள் அவள்…
“ஆமா பெரிய ஜாக்கிசான்… அப்படியே பாஞ்சு பாஞ்சு அடிச்சிட்டீங்க… அட போங்க சிஸ்… காமெடி பண்ணாதீங்க….”
“போடா போடா.. அரட்டை…” என்றபடி அவள் சிரிக்க,
தமக்கையின் அந்த புன்னகை முகத்தினை மனதினுள் பதிய வைத்துக்கொண்டவன், அந்த திருப்தியோடு,
“சரி சிஸ்… நான் இன்னைக்கு சாயந்தரமே ஊருக்கு கிளம்புறேன்…” என்று கூற, அவள் முகம் வாடியது…
“அடடா… இப்போதான 1000 வாட்ஸ் பல்ப் மாதிரி இருந்தீங்க… அதுக்குள்ள ஃப்யூஸ் போக போற எஃபெக்ட் கொடுக்குறீங்க…”
“இல்லடா… வந்ததும் உடனே கிளம்புறேன்னு சொல்லுறீயே… அதான்…”
“என்னமோ அரை மணி நேரத்துக்கு முன்னாடி வந்துட்டு இப்போ கிளம்புறேன்னு நான் சொன்ன மாதிரி ஃபீல் பண்ணுறீங்க… ஓவர் ஃபீலிங்க் உடம்புக்கு ஆகாது சிஸ்… பார்த்துக்கோங்க…”
அவனின் பதிலில் சிரித்தாலும், அவன் கிளம்புகிறேன் என்று சொல்வது மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது அவளுக்கு…
“இன்னும் ஒருநாள் தங்கிட்டு போகலாமேடா…”
“இல்ல சிஸ்… இப்போ கிளம்பினா தான் நாளைக்கு டயர்டில்லாம வேலை செய்ய முடியும்…”
“இரண்டு நாள் லீவ் எல்லாம் சொல்லிட்டு வந்துட்டேன்னு சொன்னீயேடா…”
“ஆமா சிஸ்… ஒருநாள் மட்டும் போதும்னு வந்துட்டேன்னு நாளைக்கு போய் சொல்லிடவேண்டியதுதான்… இதுல என்ன இருக்கு?...”
“ஹ்ம்ம்….” என்றவளின் குரலே அவன் கிளம்புவதில் அவளுக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்தது அர்னவிற்கு…
இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளாதவாறு, “ஓகே… சிஸ்… நீங்களும் மாமாவும் சாப்பிடுங்க… நானும் குட்டீஸும் சாப்பிட்டோம்…” என்றபடி அவன் அகன்றதும்,
சற்று நேரம் அவன் செல்லும் திசையையே அவள் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்… அதே நேரம் மாடியிலிருந்து அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான் திலீப்…
சந்தோஷத்துடன் அறையை விட்டு சென்றவளை மெதுவாக பின் தொடர்ந்த திலீப், அவள் அர்னவிடம் பேசிக்கொண்டிருந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கேட்கும் நிலை வந்தது…
அவனிடம் அவள் சிரித்து, மகிழ்ந்து பேசுவது மனதிற்கு சற்று கோபத்தை தந்த வேளையில், அர்னவ் ஊருக்கு கிளம்புகிறேன் அதுவும் இன்றே என சொல்லவும், அவன் முகத்தில் இருந்த கோபம் இருந்த இடம் தெரியாது மறைந்தும் போனது…
அவனை போக வேண்டாம் என பிடித்து நிறுத்தும் மனைவியின் மேல் ஏனோ எரிச்சல் வந்தது அவனுக்கு…
சட்டென அந்நேரம் எதேச்சையாக அவனை சாப்பிட அழைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் மேலே பார்த்தவளுக்கு திலீப் அங்கே முகம் தூக்கிக்கொண்டு நிற்பது தென்பட, தன் நிலையை எண்ணி நொந்து போனாள் அவள்…
தொடரும்
{kunena_discuss:995}