“ஏன் பவி யோசிக்கவே மாட்டியா….உன் அப்பா அவர் வைஃப் தம்பிக்கு இத்தனை வருஷமாகியும் இவ்ளவு பார்க்க முடியுறப்ப…..நம்ம கல்யாணம் முடிஞ்ச அடுத்த நிமிஷம் நான் இந்த வீட்டு மாப்ளதான….அப்போ ப்ரதிக்கு நான் பார்க்க மாட்டனா…….? நீயா இதை யோசிச்சுறுக்கனும்…..இல்ல ப்ரதி பயந்தப்ப என்னைய கூப்ட்டு ஒரு வார்த்தை பேசியாவது இருக்கலாம்….எமோஷனாகி எதுக்கு உங்கப்பாட்ட போய் நம்ம மேரேஜ் வேண்டாம்னு சொன்ன…? அதுல வந்த வினை இவ்ளவும்…. சரி போ….இப்ப இதெல்லாம் பேசி வேஸ்ட்……உங்கப்பா பயம் என்ன கடைசி காலத்துல யார் பார்ப்பான்னு தான…? நம்ம இப்ப எடுத்தவுடனே நம்ப முடியலைனாலும்….போக போக நம்ம அவங்கட்ட நடந்துகிறதை பார்த்து புரிஞ்சுட்டு போய்டப் போறாங்க….அதனால அவங்களுக்கு பிடிச்சாலும் பிடிக்காட்டாலும் ப்ரதிக்கு அவளுக்கு பிடிச்ச மாதிரிதான் மேரேஜ்….அதுக்கு நாம பொறுப்பு…ப்ரதிட்ட சொல்லி வை….இந்தா இந்த மொபைல எப்பவும் கைல வச்சிசிறு…என்ன பரச்சனைனாலும் ஆரம்பத்துலயே என்ன கூப்டு…” சிடுசிடுப்பு அவன் முகத்தோடு படர்ந்திறுக்கத்தான் பேசினான் அவன்…ஆனால் அவனது அத்தனை அணுவிலும் காதலைப் பார்த்தாள் பெண்
கிளம்பியவன் கை பற்றி நிறுத்தி….”ஐ லவ் யூ அபை…..ஐ மீன் இட்…” என்றாள் இப்போது..”
“தெரியும்டி….” என அதே சிடுசிடுப்பில் ஆரம்பித்தவன்…. பின் “உனக்கு ப்ரச்சனைனா வர மாட்ட…..ஆனா எனக்கு பர்ச்சனைனா வருவன்னு தெரியும்….” என சொல்லும் போது சின்னதாய் புன்னகை அவன் இதழில்….
ஒரு நொடி இரு கண் மூடித் திறந்தவன்…..”மனச போட்டு குழப்பிக்காத…..உன் வீட்ல உள்ளவங்களுக்காக நீ பார்த்ததுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல…. உன் அவசர குடுக்கைதனம் மட்டும் தான் கொஞ்சம் கடி…..உன்னை தனியா விடுறதுதான் தப்பு…..அப்பதான் சொதப்புற…..மேரேஜ்க்கு பிறகு அந்த தப்ப நான் செய்யவே மாட்டேன்….. எப்பவும் உன் கூடதான்” இப்போது அவனை முத்தமிட தோன்றிய நினைவை அடக்கி நிறுத்தினாள் இவள்…
அன்று இரவு
“எப்டி தீபன் உங்கம்மா இவ்ளவு பெர்ஃபெக்டா யோசிச்சாங்க….? பவி இப்டி வருவாங்க…அவங்க வீட்ல இப்டி டர்ன் ஆகும்னு…எனக்கு அவங்க மாமா கூட மேரேஜ்னு பத்திரிக்கை அடிக்க போய்ட்டாங்கன்னதும் அவ்ளவுதான் பவியும் அபையும்னு நினச்சேன்….”
“அதெல்லாம் அம்மா அப்டிதான் பொண்ணுங்கன்னா அவங்களுக்கு ரொம்ப இஷ்டம்ன்றாலயான்னு தெரியலை பொதுவா சட்டுன்னு பொண்ணுங்களை புரிஞ்சுப்பாங்க….
யவி முதல் முதல்ல வினிய பார்த்துட்டு பிடிச்சுறுக்குன்னு சொன்னத அடுத்து அவங்க வினிய பார்த்தப்ப ஒரு பெரிய கண்டிஷன் லிஃஸ்ட் வரப் போற மாப்பிள்ளைக்கு சொல்லிட்டு இருந்தா போல…… யாருக்குனாலும் அதை கேட்கிறப்ப பொண்ணுக்கு மேரேஜ்ல இஷ்டம் இல்லைனு புரிஞ்சுறுக்கும்….
ஆனா அம்மாதான் அவ ஒரே பொண்ணு……ஃப்யூசர்ல அவளோட பேரண்ட்ஃஸ பார்க்க முடியனுமேன்னு பயப்படுறான்னு புரிஞ்சி….யவிட்ட அப்பவே சொல்லிட்டாங்க……இதுதான் உனக்கானவன்னா….எனக்கு மூனு பையங்க இருக்கீங்க…நான் விழுறப்ப யார் வீட்லனாலும் இருந்துப்பேன்….. ஆனா அவள பெத்தவங்களுக்கு நீங்க மட்டும்தான்…அதனால ஆரம்பத்துல நம்ம ஊர்ல நீ இருந்தாலும்…..கொஞ்சம் கொஞ்சமா ஊரை நீ தூத்துகுடி மாத்திப் போயிடனும்…அப்பதான் அவங்களால எதாவது ஒரு தேவைன்னா உங்க வீட்ல் வந்து தயங்காம தங்க முடியும்னு கண்டிஷன் போட்டுடுதான் அவனுக்கு மேரேஜ் பேசி முடிச்சாங்க….அம்மா அப்டித்தான்….”
அவன் விளக்க…
“அப்ப எனக்கும் எதாவது டேர்ம்ஃஸ் உங்கட்ட டிக்டேட் செய்தாங்களா…?” ஆர்வமாய் இவள்…
“ம்….ஆமா…”
ஆசையாய் அருகிலிருந்தவன் முகம் பார்த்தாள்….
இப்போது இவளை மெல்ல தன்னோடு இழுத்து சேர்த்தவன் “அவங்களோட முதல் க்ராண்ட் சைல்ட் நம்மளோட குட்டிப் பாப்பாவா இருந்தா சந்தோஶமா இருக்குமாம்…..ஸ்டில் உன் இஷ்டம்னு சொல்லிருக்காங்க….”
இவன் கைகளுக்குள் சுட சுட விழித்தவளின் பெரிய கண்களின் படபடப்பை ரசித்தவன்….இப்போது இரவின் இனிமையை அங்கு தொடங்கினான்…..
அடுத்து இரண்டு வாரத்தில் இதமாய் நடந்தேறியது அபை பவி திருமணம்….திருமணம் முடிந்து தூத்துக் குடி நோக்கி ஒரு கார் பயணம்….இவர்கள் இருவருமாய்…..
வீட்டிற்கு சென்று முதல் சுற்று நிகழ்வுகள் முடிந்து அடுத்து இவனது போர்ஷனுக்கு முதல் முறையாய் தன்னவளை அழைத்துப் போனான் அபயன்….
இவர்கள் போர்ஷன் கதவை இவன் தள்ளி திறக்க….தம்பதியாய் நிழைந்த இவர்கள் மீது கொட்டுகிறது செவ்வந்தி இதழ்கள் சில கலர் துகள்கள்….. வரவேற்பு ஏற்பாடக செய்திருந்தது வினி வேலைதான்…
தங்கள் வரவேற்பறையில் தன்னவனுடன் தனிமையில் நின்ற பவி கண்ணில் படுகிறது அவன் தலையில் கிடந்த சிறு இதழ்கள்…. கை நீட்டிஅவன் கண்ணிற்கு மேலாக தடுப்பாக வைத்துக் கொண்டு அவன் தலையில் இருந்தவைகளை அவள் ஊத….