“அப்பா பேர் “
“ஜனார்த்தனன்.. “
“அவரா... சார் ஆ எனக்கு நல்லா தெரியுமே..”
“ஓகே சார்.. உங்கள சந்திச்சது ரொம்ப சந்தோஷம்.. நீங்க continue பண்ணுங்க.. நாங்க அந்த பக்கம் இருக்கிற டேபிள் போறோம்..”
“ஏன் சார்... இங்கேயே join பண்ணிக்குங்க.. எல்லோரும் ஒன்னா சாப்பிடலாம்.. “ என,
சரி என்றபடி அமர்ந்தனர்.. அங்கே சுபத்ராவும், நிஷாவும் திரு திருவென முழித்தனர். இருவருக்கும் சாப்பாடு இறங்கவே கஷ்டமாக இருந்தது.. ஒருவழியாக எல்லோரும் முடிச்சுட்டு கிளம்ப,
அர்ஜுன் & கோ விடைபெற்றனர்.. இப்போ சுபத்ரா அம்மா
“சார்.. தப்பா நினைச்சுக்காதீங்க... நாங்க சூட் ரூம் தான் போட்ருக்கோம்.. எல்லாரும் அங்கே போய் கொஞ்ச நேரம் பேசிட்டு அப்புறம் போகலாமே.. உங்க கூடவே சுபாவும், நிஷாவும் வரட்டும் .. நீங்களும் பாமிலி விட்டு இங்கே இருக்கீங்க.. கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.. “ என்றார்.. கிருஷ்ணணும் வற்புறுத்தவே .. சரி என்றான்.
கிருஷ்ணன்.. இவர்கள் எல்லோரும் செல்ல ஏற்கனவே பெரிய வண்டியே புக் செய்திருக்க, அர்ஜுன் அவன் friends பின்னாடியே மிதுன் வந்த வண்டியில் சென்றனர். ஹோட்டல் சென்ற பின் கிருஷ்ணனும், ருக்மணியும் முதலில் செல்ல,
ராகுல் “டேய் அர்ஜுன்.. கலக்கிட்டடா.. எப்படியோ அவங்க கூட intro ஆயாச்சு.. இனிமேல் கொஞ்சம் ஈசியா move பண்ணலாம்.. “
அர்ஜுனோ “டேய்.. இனிமேல் தான் உனக்கு ஆப்பு வரும் பாரு “ என்ற படி கை காட்ட ,
அங்கே சுபத்ரா & கோ பேசி கொண்டு இருந்தனர்... அவர்கள் அருகில் சத்தம் செய்யாமல் மூவரும் சென்றனர்.
ஹாய்.. friends.. இந்த எபிசொட் .. கொஞ்சம் வழவழன்னு இருக்கோன்னு ஒரு சந்தேகம்... படிச்சுட்டு சொல்லுங்க.. அடுத்த எபிசொட் லே அத சரி செய்ய ட்ரை பண்றேன்..
மழை பொழியும்
{kunena_discuss:1031}