“இது என்னப்பா அநியாயமா இருக்கு? நீ அவங்களுக்காகதானே ஓடி ஓடி சம்பாதிச்சே? உனக்குன்னு நீ எதையுமே செஞ்சுக்கிட்டது இல்லையே?”
“ஆமா புகழ்! நாம அவங்களுக்காக ஓடி ஓடி பணத்தை சம்பாதிக்கிறதிலேயே குறியா இருந்துடறோம். நாம அவங்களுக்கு பணம் செலவு பண்றதுதான் முக்கியம்னு நினைக்கிறோம். ஆனால் அவங்க நாம நேரத்தை அவங்களோட செலவழிக்கனும்னு எதிர்பார்க்கிறாங்க. வயசு காலத்தில் அது நமக்கு புரிய மாட்டேங்குது. வயசான பிறகு நம்ம பக்கத்தில் யாரும் இல்லையேன்னு ஏக்கம் வரும்போதுதான் புரியுது. நாம இல்லாமலேயே அவங்க இருக்க பழகிட்டாங்க. இப்ப நாம இடையில் சேர நினைக்கும்போது அவங்களால் ஏத்துக்க முடியலை.”
சொல்லி முடித்துவிட்டு ஆயாசத்துடன் கண்களை மூடிக்கொண்டார்.
“ஏய்! என்னாச்சுப்பா உ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்.”
“ராமு நீ அதிகமா பேசறே!” அதட்டலாக கூறினார்.
“வேறென்ன பண்ண சொல்றீங்க? உங்களுக்கா புரிய மாட்டேங்குதே.”
“உனக்கு வாய் ஜாஸ்தியாயிடுச்சு. என் அப்பா கொடுத்த இடம். உன்னை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வச்சிருக்கனும்.”
“என்னை மட்டுமா வைக்க வேண்டிய இடத்தில் வைக்கலை.”