“வேற யாரை வைக்கனும்.?”
“உங்களுக்கே தெரியுமே! நான் சொல்லிதான் புரியனுமா?”
“நீ ரொம்ப பேசறே! வண்டியை முதல்ல நிறுத்து.” அதட்டினார்.
அவனும் வண்டியை நிறுத்தினான்.
“கீழே இறங்கு. நீ இனி வேலைக்கு வேண்டாம்.”
அவன் பேசாமல் கீழே இறங்கினான். கீழே இறங்கி குனிந்து அவரை நேர்ப்பார்வை பார்த்தான்.
“இப்பக்கூட நீங்க கண்ணை மூடிக்கிட்டு பிடிவாதமா இருக்கீங்க. ஆனால் அவங்களால் பாதிக்கப்படுவீங்க பாருங்க. அன்னிக்கு உங்க கூட யாரு இருக்கப்போறாங்களோ தெரியலை. அந்த நாள் சீக்கிரம் வரனும்னு வேண்டிக்கிறேன்.”
அழுத்தமாய் சொன்னவன் விருட்டென நடக்க ஆரம்பித்துவிட்டான்.
“போடா! நீ வேலைக்கு இல்லைன்னா எனக்கு வேற ஆளே கிடைக்க மாட்டானா? வேலைக்கார க
...
This story is now available on Chillzee KiMo.
...
டில் நடந்தது நினைவில் வர கண்ணீர் உகுத்தார்.
அவரது கண்களில் கண்ணீரைக் கண்ட அன்பரசி திடுக்கிட்டு அவரருகில் பதட்டத்துடன் வந்து துடைத்தாள்.
அவளைப் பார்க்க பார்க்க அவரது குற்ற உணர்ச்சி அதிகமானது. ஆனால் அவள் இயல்பாக அருகில் வந்து தன்னைக் கவனிக்கும் விதத்தில் மனதில் ஒரு இதம் பரவியது.