யாரோ சொன்னாலும் உண்மை உண்மைதானங்க..எல்லாம் என் ராசி தான்..நீங்க ஏன் என் லைவ்ல வந்தீங்க..நா ராசியேயில்லாதவ..சின்ன வயசுலயே அப்பாவ இழந்துட்டேன் இப்போ உங்கள கஷ்டபடுத்துறேன்..இதெல்லாம் வேண்டாம்னு தான் நா எங்கேயாவது போய்ட்றேன்னு சொன்னேன்..என கதறி அழ ஆரம்பிக்க..ராமோ மொத்தமாய் உடைந்து போனான்..இவ மனசுல இன்னும் இந்த நினைப்பு இருக்கு இத எப்படி மாத்றது என் மகி ஏன் இப்படி ஆய்ட்டா..ஒரு வேளை சொல்லாம கொள்ளாம எங்கேயாவது போய்ட்டா…இல்ல என் மகியை யாருக்காகவும் நா இழக்க தயாராயில்லை..என மூளை என்னென்னவோ கணக்கு போட்டு கொண்டிருக்க,அங்கே மகியோ கண்களை துடைத்தபடியே அறை வாசலை அடைந்திருந்தாள்..
வேகமாய் முன்னே சென்று கதவை பிடித்தவன்..குட்டிமா எங்க போற??
வேண்டாம் ராம் என்ன மறந்துடுங்க எனக்கு உங்க காதல் நியாபகம் வர போறதுமில்லை நாம சேர்ந்து வாழ போறதுமில்லை நா என் வழியை பாத்துக்குறேன் விடுங்க என்னை..
அவளை உள்ளிழுத்து தாழ்பாழ் போட்டவன்..என்ன மகி பேசுற??ஆத்திரத்துல முடிவு எடுக்காத எதுவாயிருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம் போய் படு போ…
முடியாதுங்க ..என்னால நீங்க கஷ்டபடாதீங்க எனக்கு பழைய நியாபகமும் வரல உங்களோட இயல்பா வாழ ஆரம்பிக்கவும் முடில இப்படியேயிருந்தா எனக்கு பைத்தியம் பிடிச்சுரும்..உங்களுக்குநு ஒரு வாழ்க்கைய அமைச்சுகோங்க ப்ளீஸ் லீவ் மீ அலோன் என மறுபடியும் அழ,அவள் கையை ஆத்திரமாய் பிடித்தவன்..என்னடி பிரச்சனை உனக்கு எவளோ ஏதோ சொன்னானு இப்படி கதறியே என்ன நினைச்சு பாத்தியா??அவ சொன்னா நீ ராசியில்லாதவளாய்டுவியா??அப்படி பாத்தா உனக்கு அக்ஸிடெண்ட் ஆனதுக்கு காரணமே நான் தான் அப்போ என்னை என்னனு சொல்லுவ??கொலைகாரன்னா??அப்படி என்னடீ பயம் உனக்கு பழைசு நினைவுக்கே வரலனா போகுது அதனால ஒரு குடியும் முழுகி போய்டாது..இந்த நிமிஷத்துலயிருந்து புது வாழ்க்கை ஆரம்பிப்போம்..அரேஞ்சுட் மேரேஜ்னு நெனைச்சுக்கோ..இன்னைக்கு தான் கல்யாணமாயிருக்குநு நினைச்சுக்கோ உனக்கு ஒரு ஸ்பேஸ் வேணும்னுதான் நா விலகியேயிருந்தேன் ஆனா நீ அத வேற மாறி எடுத்துட்டு போறேன் போறேன்னு சொல்லிட்டு இருக்க..அவன் பேச பேச மகியின் முகத்தில் லேசாய் நிம்மதி தோன்றினாலும் அவள் முடிவை மாற்றுவதாய் தெரியவில்லை..அதை பார்த்தவனுக்கோ மேலும் கோபம் பொங்க,பிடித்திருந்த அவள் கரத்தை இன்னுமாய் இறுக்கி தன்பக்கம் இழுக்க லேசாய் வலியின் சாயல் அவளிடம் அதை கண்டவனின் உள்ளத்திலோ ரத்தம் வடிகிறது இருப்பினும் மனதை கல்லாக்கி கொண்டு என்ன சொன்னாலும் முடிவை மாத்திக்க மாட்டல??இனி உன்ட்ட பேசுறதுல ப்ர்யோஜனமில்லை..இந்த ஜென்மத்துல நா தான் உன் புருஷன்..பொண்டாட்டியா எனக்கு தேவையானத செஞ்சுட்டு நீ எங்க வேணா போ என கட்டிலில் தள்ளி அவனும் சரிந்தான்..
என்ன நடக்கிறது என்பதை அவள் உணர்வதற்குள் அவளின் உதடுகளை சிறைபிடித்திருந்தான் ராம்..முகமெங்கும் முத்த மழையில் நனைய அவனிடமிருந்து தன்னை விடுவிக்க போராடியவளுக்கோ தோல்வி தான் மிஞ்சியது..அவன் இரும்புபிடி மேலும் மேலும் வலுக்க ஒரு கட்டத்தில் போராடுவதையே மறந்து தன்னவனுக்கு இசைந்து கொடுத்தாள் மகி..ராமிற்கும் மனம் லேசானதாய் உணர்ந்தான்..அவளின் தேவை என் அருகாமைதான்..அது அவளுக்கே தெரியவில்லை..நான் இப்போது நநடந்து கொண்ட விதம் சரியோ தப்போ மகியை என்னோடு வைத்து கொள்ள வேறு வழி தெரியவில்லை..என்னை மன்னிச்சுடு குட்டிமா என மானசீகமாய் கண்ணீர் விட்டான்..
சட்டென கண்விழித்தவன் மணியை பார்க்க இரவு 2 மணியை காட்டியது..தன் மார்பில் தலை வைத்து சாதுவாய் உறங்கும் மனைவியை பார்த்தான்..கை அதுவாகவே அவள் சிகையை வருட அன்று நடந்த அனைத்து பிரச்சனையாலும் மனமும் உடலும் சோர்வாய் தூங்கி கொண்டிருந்தவளை பார்க்க பாவமாயிருந்தது..மகி என்னை மன்னிச்சுடுடா..பூ மாதிரி பாத்துக்க வேண்டிய உன்ன இப்படி கசக்கிட்டேனே..இந்த பாவத்துக்கெல்லாம் என்ன ப்ராய்சித்தம் பண்ண போறேன்னு தெரில..ஆனா உண்மையாவே எனக்கு வேற வழி தெரிலடா..என எண்ணியவனின் கண்களிலிருந்து அடக்கி வைத்த கண்ணீர் எட்டி பார்த்தது..
காலை சூரிய வெளிச்சம் முகத்தில்பட்டு எழுப்ப அவசரமாய் கண்விழித்து பார்த்தவளின் அருகே ராம் இல்லை..இரவு நிகழ்ந்தது நினைவுக்கு வர முகத்தில் நாணம் எட்டிபார்க்க கண்களில் இருதுளி நீர்..அது தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தவா வருத்தத்தை வெளிப்படுத்தவா தெரியவில்லை மகிக்கு..ராம் படுத்திருந்த இடத்தை மெதுவாய் வருடினாள்..அத்தனை குழப்பங்களையும் தாண்டி உள்ளுக்குள் பரவுகிறது ஒரு நிம்மதி..மணி 10 என்பதை பார்த்தவள் அவசரமாக குளிக்க சென்றாள்..
அங்கு ராமோ தன் நண்பனின் மனைவி டாக்டர்.ஷரன் சைக்கார்ட்டிரிஸ்ட் ஸ்பெஷலிஸ்டின் முன் இருந்தான்..
வா மச்சி நீ அவகிட்ட என்ன பேசனுமோ பேசு நா ஆபிஸ் கிளம்புறேன்டா..எந்த ஹெல்ப் வேணும்னாலும் சொல்லு..
ரொம்ப தேங்க்ஸ்டா தப்பா எடுத்துக்காத கொஞ்சம் பர்சனல் அதான்..மத்தபடி உன்ட்ட சொல்ல கூடாதுநு இல்ல..-ராம்..
டேய் ஐ நோ யு கேரி யான்..
வாங்க ராம் சொல்லுங்க என்ன ப்ராப்ளம்..-ஷரன்..