உதய் இது வரை நந்திதா கோபப் பட்டு பார்த்ததில்லை...
முறைத்திருக்கிறாள்... சிணுங்கி இருக்கிறாள்... கோபப் படுவதாக காட்ட முயன்றிருக்கிறாள்...
இது அவளின் முதல் ‘நிஜ’ கோபம்...
அவளின் குழந்தைத் தனமான அந்த கோபமும் அவனுக்கு ரசிக்க கூடியதாகவே இருந்தது...
அலுவலகத்தில் நடந்த குழப்பங்கள் மற்ற வேலைகள் என அவனிடம் இருந்த அசதி பறந்து போய் விட்டதாக தோன்றியது... ஆவல் பொங்க மனைவியை பார்த்தான்...
மாலை முழுவதும் உதய் ஏன் அப்படி செய்தான் என்று யோசித்தே கழித்திருந்த நந்திதாவிற்கு அவனின் பார்வையை பார்த்து இன்னும் அதிகமாக கோபம் வந்தது.
“கோபமா நதி??”
அவள் பதில் சொல்லவில்லை....
...
This story is now available on Chillzee KiMo.
...
டந்த நந்திதாவின் மூக்கு கலாட்டாவை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவனுக்கு கேட்டிருக்குமோ என்று இருவரும் திகைத்து திரு திருவென விழிக்க, உதய் அது எதையும் கண்டுக் கொள்ளாமல்,
“எனக்கு ஒரு தட்டில சாப்பாடு ஐடம்ஸ் எல்லாம் எடுத்து தாயேன்....” என்று அர்ச்சனாவை பார்த்துக் கேட்டான்.