(Reading time: 12 - 23 minutes)

நான் உன்னை எதுக்குமே கட்டாயப்படுத்தினது இல்லையே..உன்னோட ஆசை,லட்சியம் தான் என்னோட வாழ்க்கைன்னு தானே எல்லாமே செய்யறேன்”தவிப்புடன் கேட்டான்.

“உங்க அளவில நீங்க ரொம்ப தெளிவா தான் மாஸ்டர் இருக்கீங்க.ஆனால்..நா..நான் தான் தப்பா இருக்கேன்..எனக்கு ஒரு விஷயம் பிடிச்சுதுன்னாக் கூட,அதை செய்யறதுக்கு உங்களோட பர்மிஷனை எதிர்பார்க்கறேன்

என்னோட ஒவ்வொரு செயலுக்கும் உங்களோட ஒப்புதலையும்,பாராட்டுதலையும் எதிர்பார்க்கற அளவுக்கு,நான் உங்களுக்கு அடிக்ட் ஆகியிருக்கேன்.

கணவன் மனைவி உறவுக்கு இது சரி வராது மாஸ்டர்.அதுவும் எனக்கு இது சரிப்பட்டே வராது.இனி நான் கிளாஸ் வரமாட்டேன் மாஸ்டர்.ஊருக்குப் போறேன்.இந்த நடிப்பு,டான்ஸ் எதுவுமே எனக்கு வேண்டாம்.நான் நானா மாறனும்.எனக்கு உங்ககிட்ட இருந்து விடுதலை வேணும்...என்னை கட்டாயப்படுத்தாதீங்க”என்றவள்,அவனது பதிலை எதிர்பார்க்காமல் போய்விட்டாள்.

இதற்கு பெயர் தானே காதல் என்று அவன் மனம் அரற்றியது.ஆனால் அவளை கட்டாயப்படுத்த முயலவில்லை.அவனால் அது முடியவில்லை.

மாறாக தன்மீது பழியை போட்ட,அந்த பெண்களின் மேல் தீராத வன்மத்தை வளர்த்துக்கொண்டான்.

நிகழ்காலத்தில் கண்ணீருடன் அமர்ந்திருந்தவன்,”என்னோடான உனது உறவுக்கு பெயர் என்ன பெண்ணே..நீயாவது சொல்’நேரடியாக கேட்க முடியாமல் மனதிற்குள் கேட்டுக்கொண்டான்.

உடனே ஒரு தீவிரம் வந்தவனாக,”உன்னுடைய காதலனாக நான் இல்லாமப் போகலாம்.ஆனால் என் குழந்தைக்கு அம்மாவா நீயா தான் இருக்கப் போற..இதுல எந்த மாற்றமும் கிடையாது”என்றெண்ணியவன்,

“இப்படியெல்லாம் யோசிக்கிறேனே”என்று தன் மேலையே ஓர் விதமான பரிதாபம் உண்டாக,

“காதல் கைதியாகிப் போனேனே”என்று வாய்விட்டே புலம்பினான்.

ஆம்..இவன் காதல் என்னும் நீதிமன்றத்தில்,மரண தண்டனைக்காக காத்திருக்கும்..ஆயுட்கைதியாவான்..

தொடரும்

Episode # 10

Episode # 12

{kunena_discuss:1004}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.