(Reading time: 20 - 39 minutes)

 ”தான் லவ் மேரேஜ்னு தோனும் எனக்கு…”

பேருக்கு புன்னகைத்து வைத்தாள் ப்ரியா….

இப்போது இவள் கை பற்றி அழைத்துக் கொண்டு போய் அருகிலிருந்த சோஃபாவில் உட்கார வைத்த கண்மணி….

“அடுத்தும் அவன் வெட்டிங் பத்தி எந்த விஷயமும் ப்ரொசீடாகாம இருந்ததா……அப்ப எனக்கு உங்க சிஸ்டர் விஷயம் தெரியாது….. சோ நான் அவன அறிச்சு பிடுங்கிட்டேன்… அப்போ உனக்கு இப்பவே என் மேரேஜ் நடந்தாகறது முக்கியம்னா நீயே எனக்கு வேற பொண்ணு பாரு…… செய்துக்கிறேன்னுட்டான்…. நான் கூட வேற பொண்ணு பார்க்க ஆரம்பிச்சேன்….அப்ப மஹிதான் அந்த பொண்ண விவனா போய் பார்த்தாங்க….இப்ப நீயா பாருன்னா என்ன அர்த்தம்…? இப்பவே மேரேஜ் நடக்கனும்ன்ற உன் விருப்பத்துக்காக மட்டும்தான் கல்யாணம் செய்யப் போறேன்னு உன் அண்ணா சொல்றது  உனக்கு நல்லதா படுதா…? விவனுக்கு டைம் கொடு அவங்களா டிசைட் செய்யட்டும்னு சொன்னாங்க…..”

“….”

“அப்பதான் அவன் உங்களை விரும்பி பெண் கேட்டாலும் உங்களப் பொறுத்தவரைக்கும் இது அரேஞ்ச்ட் மேரேஜாதான் இருந்திருக்கும்னு பட்டுது….அவன் பொண்ணு கேட்டப்ப உங்க வீட்ல எதாவது நோ சொல்லி இருப்பாங்க….அதான் அவன் வேற மேரேஜ்க்கு பார்க்க சொல்றான்….ஆனா அவன் மனசு ஆறலைனு தோணிச்சு….அவன் எப்பவும் அப்படித்தான் அவனுக்கு எது வேணும்னு  வாய திறந்து சொல்லவே மாட்டான்….என்னைப் பத்தி மட்டும்தான் யோசிப்பான்…” கண்மணி சொல்லிக் கொண்டு போக

ப்ரியாவுக்கு இப்போது ஒரு படு குழப்பமான கேள்வி எழுந்தது…… விவன் இவளை கல்யாணம் செய்யனும்னு துரத்தி துரத்தி ப்ளான் போட்டான்னே இருக்கட்டும்…. இவ அதுக்கு சம்மதிக்கல…..அதனால எதோ செய்து…..இவங்க மேரேஜ வேற ரெஜிஸ்ட்டர் செய்துட்டான்னா….. அடுத்து இவ செபின் கூட வெட்டிங் வரைக்கும் போறப்ப…..அவன் அதை தடுக்க ட்ரைப் பண்ணவே இல்லையே ஏன்?

இதுல தங்கைட்ட வேற பொண்ணுவேற பார்க்க சொல்லி இருக்கான்…???

ஒரு வேளை ஆயிரத்தில் ஒரு வாய்ப்பா……நிஜமாவே இவள இப்படியெல்லாம் செய்தது விவனா இருக்காதோ???

அப்படின்னா இவ விவனுக்கு இப்ப செய்துட்டு இருப்பது கொடுமை…..

கடவுளே கிட்டதட்ட அவன இவளோட நிலமைய காட்டி இமோஷனலா மிரட்டி இவ கல்யாணம் செய்துறுக்கா…..

ஒரு கணம் இப்படி ஓடினால் இன்னொரு கணம் மாற்றி ஓடுகிறது மனம்….

வெயிட்ட மினிட்…..  இவ அவன கல்யாணம் செய்ய மாட்டேன்னு சொன்னதுக்கு  பழி வாங்க இப்படி இவள கன்சீவாக்கிட்டு…..அடுத்து மேரேஜையும் பதிஞ்சு இவ லைஃபை ஸ்பாயில் செய்துட்டு….அவன் வேற கல்யாணம் செய்ய போயிருந்தான்னா…?? அதனால இவ என்ன செய்றான்னே கண்டுகாம இருந்திருந்தான்னா…???!! இப்ப இவ திரும்பி வரவும் சரின்னு கல்யாணம் செய்துகிட்டானோ? அப்படின்னா அவன் ரியல் சைக்கோ…அடுத்து என்ன செய்யமாட்டான்னு என்ன நிச்சயம்..????

இதயத்தில் ஏறிய எரிச்சல் அவள் இள முகத்திலும் வந்தது அது.

இதுல எது நிஜம்?????

இதில் விவன் நிரபிராதியாக இருந்தால் இவள் அவனுக்கு செய்வது மாகா அநியாயம்…. தப்பு அவன் பேர்லனா அவன மனுஷனா நடத்துறது கூட பாவம்….

இதில் ஒரு முடிவுக்கு வருவது இவளுக்கு மிக மிக முக்கியம்…..ஆனா எப்படி உண்மைய கண்டு பிடிக்க???

குழம்பிக் கொண்டிருந்த ரியாவை “சாரி அண்ணி…”  என்ற கண்மணியின் குரல்தான் நடப்புக்கு கொண்டு வந்தது….

“அவன் எனக்காக வேற பொண்ண பார்க்கலாம்னு சொன்னது உங்களுக்கு ஹர்ட் ஆகிட்டோ….சாரி அண்ணி..… உங்களவிட அவன் எனக்கு இம்பார்டென்ஸ் குடுப்பான்னு நினச்சுடாதீங்கண்ணி….. நான் அப்படி எதுவும் மீன் செய்யல…..” கண்மணி எத்தனை பயந்து போய் பதறுகிறாள் என்பது அவள் குரலிலும் முகத்திலும் தெரிய….

இவள் பதில் சொல்லும் முன்னும்…. அப்போதுதான் அங்கு வந்திருந்த விவன்…..

“உன் அண்ணி என்னடான்னா  கண்மணிய விட நான்தான் முக்கியம்ன்ற மாதிரி இப்பதான் கல்யாணம் ஆன பொண்ண என் பின்னால் அலையவிட்டுடீங்கன்னு சண்டை போடுறா…..நீ என்னடான்னா இப்படி புலம்பிட்டு இருக்க…” என்றபடி கண்மணி அருகில் வந்து உட்கார்ந்தான். அவனுமே ப்ரியா போல முழுக்கவும் வெளியே கிளம்பும் அளவு தயாராகி இருந்தான்.

இப்போது கண்மணி முகத்தில் மகிழ்ச்சி மீண்டுமாய் உதயம்…..

“இங்க பாரு நிமு…..நான் ஒன்னும் குழந்த இல்ல…. யாரோட இடத்தையும் குழப்பிக்க மாட்டேன்….” என தொடர்ந்த விவன்…..கண்மணிக்கு அடுத்திருந்த தன் மனைவியை ஒரு கணம் பார்த்துவிட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.