(Reading time: 19 - 37 minutes)

15. பெண்ணே என்மேல் பிழை!!! - தீபாஸ்

PEMP

றுநாள் காலை போன் அலாரத்தில் கண்விளித்தனர் இருவரும், ழையா தான் அவனை அணைத்தவாறு படுத்திருந்த நிலையை பார்த்தவள் வேகமாக் தன் கையை எடுத்துவிட்டு எழுந்து அமர்ந்தாள்.

அவளின் செய்கையை பார்த்தவன் உதட்டில் குறும்புச் சிரிப்புடன் எழுந்தவன் கை ஒரே பக்கமாக அவளை தாங்கி படுத்ததால் மரத்துப் போயிருந்தத்து , ஸ்ஸ்......என்ற சத்தத்துடன் வழியை பிரதிபலித்த முகத்துடன் எழுந்து அமர்ந்தான்.

உட்கார்ந்தவன் உன்னால் பார் என் கை மரத்துப் போய்விட்டது என்றான்.

உடனே கோபத்துடன், “என்னாலா?” நானா உங்களை இப்படி படுக்கச்சொல்லி கட்டாயமா படுத்தினேன்? உங்களால் வந்த வினைக்கு நான் எப்படி பொறுப்பு? என்று தன் முகச் சிவப்பை மறைக்க, கோபமெனும் போர்வைக்குள் தன்னை மறைத்தபடி பொரிந்தாள் ழையா.

அவளின் முகச் சிவப்பை கண்டுகொண்டவன் மனதில் உல்லாசம் பிறந்தது எனவே “நீ என்னை கட்.......டிப்பிடித்து தூங்கியதால் என்னால் திரும்பித் திரும்பி படுக்கமுடியாமல் போனது” சோ…. நீ தான் என் வழியை சரிசெய்யவேண்டும் என்று கண்கள் பளபளக்க அவளிடம் கூறினான்.

நானா நான்..... எப்படி.....சரிசெய்யமுடியும்? என்று கேட்டாள்.அதற்கு எப்படி என்று நான் சொல்கிறேன் போய் அந்த டேபிள் ட்ராயரை திற என்று கூறினான். அவன் காண்பித்த டேபிளின் ட்ராயரை திறந்த ழையா எதுக்கு என்ற கேள்வி தாங்கிய முகத்துடன் அவனை பார்த்தாள்..

அதில் அயோடக்ஸ் பாட்டில் இருக்கும் பார் அதை எடுத்துவா என்று கூறினான்.

அவன் தேய்த்துக் கொள்ள கேட்கிறான் என்று அதனை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு குளிப்பதர்காக போவதற்குத் திரும்பியவளை பார்த்து என்ன பாட்டிலை என்கையில் கொடுத்துவிட்டு நீபாட்டுக்கு போனால் என்ன அர்த்தம்? என்று கேள்விகேட்டான் மஹிந்..

அவன் அவ்வாறு கேட்டதும் ழையா, அதுதான் மருந்தை எடுத்து கொடுத்துவிட்டேனே என்றாள்.

உடனே மஹிந், எடுத்துகொடுத்தால் மட்டும் போதுமா? யார் தேய்த்துவிடுவார்கள். “கம் கம் உன் ஹப்பிக்கு தேய்த்துவிடு” என்று பாட்டிலை அவளிடம் நீட்டினான்.

உடனே “ஹலோ பாஸ் அதெல்லாம் தேய்த்துவிடமுடியாது. நீங்களே தேய்த்துகொள்ளுங்கள் என்றாள் “ கடுப்புடன்.

ம்...........கூம்....நீ இப்பொ வந்து தேச்சுவிடாவிட்டால் நான் பேட்டிஎடுக்கவரும் ரிப்போர்டர்களிடம் இந்த கழுத்துடனேயே போய் நின்று பேட்டி கொடுப்பேன்

பிறகு என்ன ஆச்சு உங்கள் கழுத்துக்கு என்று கேட்டால், உன்னால் தான் இப்படி ஆகிவிட்டது என்று கூறுவேன் உனக்கு ஓகே வா? என்றான்.

அவன் அவ்வாறு சொன்னதும் கொடுங்க பாட்டிலை என்று கோபத்துடன் அவனிடம் இருந்து மருந்தை கை பற்றியவள் அவனின் அருகில் சென்று நின்று கொண்டு தேய்த்துவிட ஆரம்பித்தாள்.

அவள் தனக்கு மருந்து தேய்த்துவிடுவதை கண் மூடி அவன் ரசிப்பதை பார்த்தவள் வேண்டுமென்றே அழுத்தி தேய்த்துவிட்டால்.

ஸ்ஸ்.......ராட்சசி அத்தானுக்கு வலிக்காமல் தேய்யிடீ என்றதும். என்னது அத்தானா? பாவமே என்று தேய்த்துவிட்டால் அத்தான், பொத்தான் என்று என்னை கடுப்படிக்காதீர்கள் பாஸ் என்று படபடவென்று பொரிந்தாள்.

ஏய்… என்ன நீ, என்னை இன்னும் பாஸ் என்று கூப்பிடுகிறாய் ,இங்க பார் ழையா இப்பொழுது பேட்டி எடுக்க வருபவர்கள் முன் என்னை பாஸ் என்று கூப்பிட்டாயானாள் நான் கடுப்பாகி அவர்களை முன் உனக்கு பனிஸ்மென்ட் கொடுத்துவிடுவேன், என் பனிஸ்மென்ட் என்னனு தெரியுமில்ல என்று அவளது உதடுகளை பார்த்து கூறியதும் ழைய்கவின் உதடுகள் நடுக்கத்துடன் அப்போ எப்படி உங்களை கூப்பிட என்று வார்த்தைகளை உதிர்த்தது.

ஒரு கணவனை மனைவி எப்படி கூப்பிடுவாலோ அதேபோல் கூப்பிடு “ஓகே வா ழையா”ம்..... என் வீட்டில் என் அம்மா அப்பாவை “என்னங்க, இங்கவாங்க, போங்க,” என்று பேசுவார்கள். அதேபோல் கூப்பிடு அல்லது உன் வீட்டில் உன் அம்மா அப்பாவை கூப்பிடுவது போல் ஆசையாக “மாமா ,அத்தான்” அப்படி ஏதாவது சொல்லி கூப்பிடு என்று கூறினான்.

எங்க வீட்டில் ஒன்றும் என் அம்மா நீங்கள் சொல்வது போல் ஒன்றும் கூப்பிடமாட்டார்கள் ,கவி அப்பா இங்கவாங்க என்றோ அல்லது வருணப்பா என்றோ தான் கூபிட்டு பேசுவார்கள் என்றாள்.

அவள் கூறியதைக் கேட்டவன் அப்போ நாமும் ஓர் குழந்தைக்கு ஏற்பாடு பண்ணுவோமா? என்றான்.

உடனே, உங்கள் ஆண்பிள்ளை புத்தி இப்படித்தானே வேலை செய்யும் என்று கோபத்துடன் கூறினாள் ழையா.

அவள் அவ்வாறு சொன்னதும். நீதானே உன் அப்பாவை உன் அம்மா கவிஅப்பா என்று கூப்பிடுவார்கள் என்று சொன்னாய், அது போல் நீயும் கூப்பிட ஓர் குழந்தை நமக்கு பிறக்க நாம் முயர்ச்சிசெய்வோமா? என்று கேட்டாள் நீ கோபப்படுகிறாய் என்று குறும்புடன் கூறினான்.

அவள் அவனை முறைப்புடன் பார்க்கவும் ஓகே ஓகே என்றான் சிரிப்புடன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.