"உலகத்திலயே ரொம்ப கேவலமா, அருவெறுப்பா, அசிங்கமா, பார்த்த உடனே கொமட்டிகிட்டு வர போல இருக்க ஒரு பெண்ணை போட்டோ பிடிச்சு நிகழ்ச்சி ஒண்ணுக்கு அனுப்பி வச்சா பரிசு கிடைக்குமாம். அதனால தான் உன்னை போட்டோ பிடிச்சிருக்கான்"
"என்ன? விளையாடுறியா?" கோபத்தோடு கேட்டாள் ஜெஸிகா.
"நிஜமாதான் சொல்றேன்"
"இந்த வீட்டுக்கு போய் நான் வந்தேன் பாரு. என்ன சொல்லணும்"
"அதை ஏண்டி வீட்டுக்குள்ளே இருந்துகிட்டே சொல்லுற வெளிய போடி"
மேற்கொண்டு எதுவும் பேச பிடிக்காத ஜெஸிகா அங்கிருந்து புறப்பட்டாள்.
"இதான் நீ வீட்டுக்கு வரது கடைசியா இருக்கணும். அதுக்கு வந்தேன் இதுக்கு வந்தேன்னு திரும்பவும் இங்க வந்து என் மனசை கலைக்க பார்த்தா அவ்வளவு தான் சொல்லிட்டேன்"
"ஜான் கொஞ்சம் பக்கத்துல வா"
"எதுக்குடி?"
"வா சொல்றேன்"
ஜான் ஜெஸிகாவின் அருகே சென்றான்.
கையில் வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேயை மீண்டும் அவன் முகத்தில் அடித்துவிட்டு .வீட்டை விட்டு வெளியேறினாள் ஜெஸிகா.
ஜான் எரிச்சலால் துடித்தான்.
ஜானை சந்தித்த கோபத்தில்.தன்னைத் தானே திட்டிக்கொண்டு சென்றாள் ஜெஸிகா. மழை அதிகமாக பெய்தது. ஏற்கனவே காய்ச்சலிலும் அலைச்சலிலும் சோர்ந்து போயிருந்த ஜெஸிகா மயக்கம் அடைந்து கீழே விழுந்தாள்.
தொடரும்...
{kunena_discuss:983}