(Reading time: 2 - 4 minutes)

குட்டிக் கதைகள் – 55. காரின் உயரம்...

ரு கார் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பொறியாளர் ஒருவர் உலகத் தரம் வாய்ந்த கார் ஒன்றை வடிவமைத்தார். அந்த நிறுவனத்தின் ஸி.ஈ.ஒ பொறியாளரை மிகவும் பாராட்டினார்.

  

உற்பத்திப் பகுதியிலிருந்து ஷோரூமுக்கு காரை வெளியே கொண்டு வர முயன்றபோது, ​​அந்த கார் நுழைவாயிலை விட 2 அங்குல உயரம் அதிகமாக இருப்பதை கண்டுப்பிடிதார்கள்.

 

காரை டிசைன் செய்யும் போது இதைக் கவனிக்கவில்லையே என்று பொறியாளர் வருத்தமடைந்தார்.

   

ஸி.ஈ.ஒ வோ காரை உற்பத்தி பகுதிக்கு வெளியே எப்படி எடுத்துச் செல்வது என்று குழப்பமடைந்தார்.

 

காரை அட்ஜஸ்ட் செய்து வெளியே கொண்டு வர முடியும். ஆனால்  காரின் மேல் சில கீறல்கள் இருக்கும். அதை டச் செய்து சரி செயலாம் என்று கார் பெயின்டிங் எக்ஸ்பர்ட் கூறினார்.

 

நுழைவாயிலை உடைத்து, காரை வெளியே எடுத்து, பின்னர் நுழைவாயிலை சரி செய்து விடலாம் என்று பொறியாளர் கூறினார்.

 

ஸி.ஈ.ஒ க்கு இரண்டு ஐடியாவும் பிடிக்கவில்லை. உடைப்பது, கீறல் விழுவது எல்லாம் நல்ல அறிகுறியாக அவருக்கு தோன்றவில்லை.

  

அந்த பகுதி வாட்ச்மேன் நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தார். மெதுவாக ஸி.ஈ.ஒ வை அணுகினார். அவர்களுக்கு ஒரு யோசனை கொடுக்க விரும்பினார். அங்கிருந்த வல்லுநர்களால் கொடுக்க முடியாத ஐடியாவை இவர் எப்படி சொல்வார் என்று மற்றவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

 

காவலாளி "கார் நுழைவாயிலை விட சில அங்குலங்கள் மட்டுமே உயரமாக உள்ளது. எனவே காருடைய டயரில் இருந்து காற்றை எடுத்து விட்டால் காருடைய உயரம் குறைந்துவிடும், எளிதாக வெளியே எடுக்க முடியும்" என்றார்.

  

அனைவரும் பாராட்டி கைதட்டினர் !!!

 

ஒரு நிபுணர் பார்வையில் இருந்து மட்டும் பிரச்சனைகளை ஆராய்ச்சி செய்யாதீர்கள். ஒரு சாதாரண மனிதனின் பார்வையில் இருந்து யோசித்தால் எளிதான புது தீர்வுகள் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்!

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.