(Reading time: 3 - 5 minutes)

குட்டிக் கதைகள் – 56. பேசும் குகை 

முன்பு ஒரு காலத்தில், ஒரு வயதான சிங்கம் காட்டில் அலைந்து கொண்டிருந்தது. அது இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை எனவே மிகவும் பசியுடன் இருந்தது.

  

ஒரு குகை சிங்கத்தின் வழியில் இருந்தது. அந்த குகையைப் பார்த்து,  “ஆஹா! இந்த குகையில் யாரோ வசிப்பது போல தெரிகிறது. நான் குகைக்குள் ஒளிந்துகொள்வேன். இந்த குகையில் வசிக்கும் விலங்கு வரும் போது, அதை வேட்டையாடி உண்டு விடுவேன்,” என யோசித்தது.

  

சிங்கம் குகைக்குள் சென்று தன்னை நன்றாக மறைத்துக் கொண்டது.

  

சில மணிநேரங்கள் சென்றன.

  

அந்த குகையில் வசித்த ஒரு நரி அங்கே வந்தது. குகையின் உள்ளே நுழையும் போது, ​​குகைக்கு பக்கத்தில் வேறு விலங்கின்  கால்தடங்கள் இருப்பதைக் கண்டது.

  

ஆனால் குகையில் இருந்து வெளியே செல்லும் கால்தடங்கள் இல்லை.

  

நிலைமையை விரைவாகப் புரிந்து கொண்ட நரி சமயோசிதமாக உள்ளே வேறு விலங்கு இருக்கிறதா என்றுக் கண்டறிய முடிவு செய்தது. அதனால், “வணக்கம் குகையே! நான் வந்து விட்டேன். நீ இன்று என்னை வரவேற்க மாட்டாயா? " என்று சத்தமாக கேட்டது.

  

எந்த பதிலும் கிடைக்காததால், நரி மீண்டும் கத்தியது, “அன்புள்ள குகையே, நீ என் மீது கோபத்தில் இருக்கிறாயா? நீ பேசவில்லை என்றால், நான் உள்ளே வரமாட்டேன்.”

  

இதை கேட்ட சிங்கம், அந்த குகை பேசும் குகையாக இருக்க வேண்டும் என்று நினைத்தது! தான் உள்ளே இருப்பதால் பயந்து குகை பதில் சொல்லவில்லை என்றும் யோசித்தது.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.