Page 2 of 2
எனவே, சிங்கமே கத்தியது, "என்னுள் குடியிருப்பவரே. உள்ளே வா. நான் உனக்காக காத்திருகிறேன். "
புத்திசாலி நரி அது சிங்கத்தின் குரல் என்பதைக் கண்டுக்கொண்டது. உள்ளே சென்றால் தன் கதி அதோ கதி தான் என சிங்கத்தின் திட்டத்தையும் விரைவாக உணர்ந்தது.
“ஒரு குகை பேசும் என்று நினைப்பதற்கு நீ மிக பெரிய முட்டாளாக இருக்க வேண்டும்” என்று சொல்லிய நரி வேகமாக அங்கிருந்து ஓடியது.
ஏமாற்றம் அடைந்த சிங்கம் தனது முட்டாள்தனத்திற்கு வருத்தப்பட்டு கொண்டு மீண்டும் பசியோடு அலைந்தது.
கருத்து:
எந்த மாதிரியான கடினமான சூழ்நிலையிலும் சமயோசித அறிவு பலன் தரும்.