குட்டிக் கதைகள் – 58. நாய் குட்டி
ஒரு கிணறு இருந்த ஒரு பண்ணையில் ஒரு நாயும் அதனுடைய குட்டிகளும் வாழ்ந்தன.
தாய் நாய் குட்டிகளிடம், கிணற்றின் அருகே செல்லவோ அல்லது அதைச் சுற்றி விளையாடவோ வேண்டாம் என்று கூறியது.
குட்டிகளில் ஒன்று ஏன் கிணற்றுக்கு செல்லக்கூடாது என்று யோசித்து அதை ஆராய முடிவு செய்தது.
அந்த நாய் குட்டி கிணற்றுக்குச் சென்றது. சுவரில் ஏறி உள்ளே எட்டிப் பார்த்தது.
அங்கு, அது தனது பிரதிபலிப்பைக் கண்டது, அது மற்றொரு நாய் என்று நினைத்தது.
நாய் குட்டி செய்த அனைத்தையும் கிணற்றில் இருந்த மற்ற நாயும் (குட்டியின் பிரதிபலிப்பு) செய்வதைக் கண்ட நாய்க்குட்டி கோபமடைந்தது.
நாயுடன் சண்டையிட முடிவு செய்து கிணற்றில் குதித்தது. அங்கு நாய் எதுவும் இல்லை!
குட்டி தொண்டைக் காய குரைத்து, குரைத்து நீந்திக் கொண்டே இருந்தது. பல மணி நேரங்களுக்குப் பிறகு சத்தம் கேட்டு பண்ணை ஆள் வந்து அதைக் காப்பாற்றினார்.
நாய்க்குட்டி நல்ல ஒரு பாடம் கற்றுக்கொண்டது.
கருத்து:
பெரியவர்கள் சொல்வதை எப்போதும் கேளுங்கள். அவர்களிடம் கேள்வி கேளுங்கள், ஆனால் அவர்களின் பேச்சை மீறாதீர்கள்.