(Reading time: 2 - 4 minutes)

குட்டிக் கதைகள் – 60. கஞ்சனின் தங்கம்

ரு ஊரில் ஒரு கஞ்சன் வாழ்ந்து வந்தான்.

  

அவன் தன் தங்க நாணயங்களை தோட்டத்தில் குழித் தோண்டி பத்திரமாக புதைத்து மறைத்து வைத்தான். அந்த இடத்தை அடையாளம் காண சில கற்களை அங்கே வைத்தான். அது மற்றவர்களுக்கு தெரியாததாக இருக்க சுற்றி செடிகளையும் நட்டு வைத்தான்.

  

ஒவ்வொரு நாளும், தூங்க செல்வதற்கு முன், கற்கள் இருக்கும் இடத்திற்கு சென்று மறைத்து வைத்திருக்கும் தங்கத்தை நாணயங்களை எண்ணுவான். ஒவ்வொரு நாளும் இந்த வழக்கத்தைத் தொடர்ந்தான். ஆனால் ஒரு முறை கூட அவன் சேமித்த தங்கத்தை செலவழிக்கவில்லை.

  

ஒரு நாள் அவன் இப்படி தங்க நாணயங்களை எண்ணுவதை ஒரு திருடன் பார்த்து விட்டான்.

  

அவன் கஞ்சன் வீட்டிற்குள் செல்வதற்காகக் காத்திருந்தான். பிறகு, திருடன் மறைவிடத்திற்குச் சென்று தங்கத்தை எடுத்துச் சென்றான்.

  

அடுத்த நாள், கஞ்சன் தனது புதையல் காணவில்லை என்பதைக் கண்டு சத்தமாக அழ ஆரம்பித்தான்.

  

அவனது பக்கத்து வீட்டுக்காரர் கஞ்சனின் அழுகுரல் கேட்டு என்ன நடந்தது என்று விசாரித்தார். என்ன நடந்தது என்று அறிந்ததும், பக்கத்து வீட்டுக்காரர் கேட்டார், "நீங்க ஏன் பணத்தை வீட்டுக்குள்ளே சேமித்து வைக்கலை? அப்படி வச்சிருந்தா ஏதாவது வாங்கணும்னா ஈஸியா இருந்திருக்குமே! "

  

"வாங்கவா? நான் அந்த தங்கத்தை எதுக்கும் பயன்படுத்த மாட்டேன். நான் அதை எப்போவும் செலவு செய்ய வேண்டாம்னு பொத்தி பொத்தி வச்சிருந்தேன்.”

  

இதைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் ஒரு கல்லை குழிக்குள் எறிந்துவிட்டு, “அப்படியானால், இந்தக் கல்லையே உள்ளே போட்டு வச்சுக்கோங்க. நீங்க இழந்த தங்கத்துக்கும் இதுக்கும் ஒரு வித்தியாசமும்” என்றார்.

  

கருத்து:

ஒரு பொருள் அது எதற்குப் பயன்படுத்தப் படுகிறது என்பதை வைத்து தான் அதன் மதிப்பும் மதிப்பீடு செய்யப் படுகிறது!

   

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.