(Reading time: 6 - 11 minutes)

  

 தொலைவிலேயே இந்த அன்புக் காட்சியை அண்ணாவி அல்சேசன் பார்த்தது. ஆனால் அதனால் அந்தப் புதரின் அருகில் நெருங்கிச் செல்ல முடிய வில்லை. அந்த முயல்கள் வாழ்ந்த இடத்திலிருந்து வந்த தீய நாற்றம் அதை நெருங்க விடவில்லை.

  

 இத்தனை அழகாகவும் பளபளப்பாகவும் பார்க்கப் பரிசுத்தமாகவும் இருக்கும் இந்த முயல்கள் வாழும் இடம் இப்படி இருக்கிறதே. ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு குறை இருப்பது இந்த உலகத்து இயற்கை போலும். எல்லா நிறையும் உள்ளவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் போல் இருக்கிறது என்று அண்ணாவி நினைத்துக் கொண்டது.

  

 மறுநாள் முதல் அண்ணாவி அல்சேசன் எல்லா மாணவர்களையும் ஒன்று போல் நடத்தியது. உயர்ந் தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடின்றி எல்லாக்குட்டி களையும் சமமாக நடத்தியது. அதனால் அண்ணாவி யின் புகழ் காடெங்கும் பரவியது.

  

 அண்ணாவி ஓர் அதிசய ஞானி என்று அந்தக் காட்டு விலங்குகள் பேசிக்கொண்டன. அது தொடங்கிய பாலர் பள்ளி சீரும் சிறப்புமாக நடந்தது.

  

------------

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.