(Reading time: 3 - 5 minutes)
தெனாலி ராமன் கதைகள்
தெனாலி ராமன் கதைகள்

வீரர்கள் அவர்களை பிடித்து, அரச சபைக்கு இழுத்து வந்தனர்.

  

கிருஷ்ணதேவராயர் கோபத்துடன் அவர்களின் முகமூடியை நீக்க செய்தார்.

  

அப்போது திருடர்களில் ஒருவன் தெனாலிராமன் என்று அறிந்து அதிர்ந்துப் போனார்.

  

தெனாலி ராமன் நடந்ததை விளக்கினான்.

  

அரசே நான் காணாமல் போன இந்த ஒரு மாதத்தில் அண்டை நாட்டு மன்னன் அரண்மனையில் மாறுவேடத்தில் இருந்து வந்தேன். நீங்கள் நண்பராக நினைத்த அந்த உதயன் உங்களை எதிரியாக நினைக்கிறான். அதனால் நம் நாட்டின் அமைதியை குலைக்க தன் வீரர்களை கொள்ளையடிக்கும் முகமூடி திருடர்களாக அனுப்பி வைத்தான். நான் யார் என்று தெரியாமல் என்னையும் அனுப்பிவைத்தான். உதயனின் உண்மை முகத்தை காட்டவே இந்த கும்பலில் இருந்தேன். அப்படியே நம் வீரர்களிடம் அனைவரும் அகப்படும் விதத்தில் நடந்துக் கொண்டேன். அதற்கு பிறகு இப்போது நடந்தவை தங்களுக்கு தெரியும்!

  

ராமா, அண்டை நாட்டு மன்னரின் துரோகத்தை கண்டுபிடித்து காட்டி நம் நாட்டை காப்பாற்றி விட்டாய்.

  

மன்னர் ராமனை பாராட்டியதுடன் அவனுக்கு பல பரிசுகளும் வழங்கி கௌரவித்தார்.

  

நாம் யாரை நண்பர்களாக ஏற்றுக் கொள்கிறோம் என்பதில் கவனம் தேவை. அதே நேரம், ஆபத்து நெருங்கி வந்தாலும் நம் புத்திசாலித்தனத்தால் வெற்றி பெறலாம்.

  

------------

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.