குழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 1. திருடர்களை பிடிப்பாரா தெனாலிராமன்?
விஜயநகரத்தை கிருஷ்ணதேவராயர் ஆட்சிப் புரிந்தக் காலத்தில், தெனாலி ராமன் அவரின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.
தெனாலி ராமனின் புத்தி கூர்மையும், சாதூர்யமும் உலகப் பிரசித்திப் பெற்ற செய்தி.
ஒரு காலத்தில் விஜயநகர முழுவதும் திருட்டும் கொள்ளையும் மிகவும் அதிகமாகக் காணப்பட்டது.
மக்கள் எல்லோரும் பயத்தில் நடுங்கினார்கள். இரவில் நிம்மதியாக தூங்க கூட முடியாமல் தவித்தார்கள்.
மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு இதைப் பற்றி மிகவும் கவலையாக இருந்தது. காவலாளிகளை கொண்டு இரவு பகலாக காவல் போடப்பட்டும் திருட்டு பயம் குறையவில்லை. தினமும் சபையில் மக்கள் இதைப் பற்றி குறைகள் சொன்ன வண்ணம் இருந்தனர்.
இந்த திருட்டுப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் மன்னர் மிகவும் வேதனையில் இருந்தார்.
எந்த அமைச்சர்களுக்கும் இதை எப்படி தீர்ப்பது என்று தெரியவில்லை.
கடைசியில் மன்னர் தெனாலிராமனை அழைத்தார்.
“தெனாலிராமா, நாட்டில் பயங்கர திருட்டு, கொள்ளை நடக்கிறது. இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். எத்தனை காவலாளிகளை வேண்டுமென்றாலும் உனக்கு துணையாக தருகிறேன்.”
“மன்னா காவலாளிகள் ஒருவரும் வேண்டாம், நான் ஒருவனே ஒரு வாரத்தில் திருடர்களை பிடித்து தருகிறேன்” என்று பொறுப்பெடுத்துக்