Page 2 of 2
விலங்குகள் என்னைக் கண்டு பயத்து ஓடுவதை நீயே உன் கண்ணால் பார்க்கலாம் என்றது நரி.
”சரி அதையும் தான் பார்ப்போமோ” என்று கூறிச் சிங்கம் நரியுடன் புறப்பட்டது.
இரண்டும் சேர்ந்து காட்டைச் சுற்றின. சிங்கத் தைக் கண்டு பயந்து எதிர்ப்பட்ட விலங்குகள் ஓடி ஒளிந்தன.
அந்த மூடச் சிங்கம் எல்லா விலங்குகளும் நரியைப் பார்த்துப் பயந்து ஓடுவதாக நினைத்துக் கொண்டது. நரியிடமிருந்து தானும் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து ஓடி ஒரு புதரின் மறைவில் ஒளிந்து கொண்டது.
நரி வெற்றி நடை போட்டுக் கொண்டு அங்கிருந்து சென்றது.
கருத்து:
தன் சுய பலத்தை உணராமல் இருப்பவன், வெற்றிப் பெற முடியாது!
------------