(Reading time: 6 - 12 minutes)

சிங்கமும் அவர்களை கொல்ல வேண்டுமென்று எண்ணி அந்த மரத்தில் ஏற ஆரம்பித்தது. அதைப் பார்த்ததும் இரண்டு குழந்தைகளும் பயந்து போய் மரத்தின் உயரமான கிளைகளுக்கு செல்ல ஆரம்பித்தார்கள். சிங்கமும் பின் தொடர்ந்தது. இப்படியே நடந்து கொண்டிருக்க ரமாவும் சுரேஷிம் பயந்து அழ ஆரம்பித்தார்கள்.

இறைவா, இந்த சிங்கத்திடமிருந்து எங்களை காப்பாற்றும்” என கதற அவர்களுக்கு உதவ வானத்திலிருந்து ஒரு கயிறு கீழே வந்தது. அதனை இருவரும் பற்றிக் கொள்ள அவர்கள் கொஞ்ச கொஞ்சமாய் மேலே எழும்பலானார்கள்.

உடனெ சிங்கமும் இறைவனிடம் ஜெபிக்க ஆரம்பித்தது. “இறைவா, நீர்தான் எனக்கும் இப்படி ஒரு கயிறு தந்து உதவ வேண்டும்” என்றது.

உடனே சிங்கத்திற்கும் வானிலிருந்து கயிறொன்று வந்தது. குழந்தைகள் மேலே செல்ல செல்ல சிங்கமும் கயிற்றில் மேலே ஏறிக் கொண்டிருந்தது.

இப்படியே நடந்துக் கொண்டிருக்க மரத்தின் உயரம் தாண்டி இருவரும் மேலே அந்தரத்தில் மிதக்க ஆரம்பித்தார்கள். சிங்கமும் தன் வலிய கால்களால் கயிற்றைச் சுற்றி பிடித்துக் கொண்டு ரமாவையும் சுரேஷையும் பிடிக்க மேலே ஏறிக் கொண்டிருந்தது.

அதிகாலை புலரும் வேலை வரும் முன்னரே எழுந்துக் கொண்ட அந்த ஊர்காரர்கள் இதைப் பார்த்து திகைத்துப் போய் விட்டார்கள். குழந்தைகளுக்கு கடவுள் மேல் கோபம் வந்தது. “நாம் கேட்டதும் நமது உதவிக்கு கயிறு கொடுத்த இறைவன் இந்த சிங்கத்திற்கும் கொடுத்திருக்க வேண்டுமா?” என பேசிக் கொண்டிருக்கும் போது தான் வெளிச்சத்தில் சுரேஷ் சிங்கத்தின் கயிற்றை பார்த்தான்.

அக்கா அங்கே பாருக்கா, சிங்கம் ஏறிட்டு இருக்கிற கயிறு அறுபட்டு இருக்கு” என உற்சாகத்தில் கூறினான்.

ஆமாம், சிங்கம் வலுக் கொடுத்துக் கொண்டு ஏறிய அந்த கயிறு நூல் நூலாக பிரிந்து எந்நேரமும் அற்று விடும் நிலையில் இருந்தது. நடு வானில் பயணித்துக் கொண்டிருந்த சிங்கத்திற்கு அப்போது என்ன செய்ய வேண்டுமென்றே புரியவில்லை. கயிறு அறுபட உயரத்திலிருந்து கீழே விழுந்த சிங்கம் துடிதுடித்து இறந்து போனது.

ஊராரின் உதவியோடு கீழே இறங்கிய ரமாவும், சுரேஷும் தங்களுக்கு நிகழ்ந்தவற்றையெல்லாம் சொல்ல, எல்லோரும் இணைந்து தேடி பள்ளத்தில் விழுந்திருந்த மீனாவை காப்பாற்றினார்கள்.

அதிசயமாக மீனா அதிக உடல்காயங்கள் இல்லாமல் உயிரோடு பிழைத்திருந்தார். தன்னை துன்புறுத்திய சிங்கம் தற்போது உயிரோடு இல்லை என அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். அவர்கள் வாழ்க்கை மறுபடியும் முன் போல மகிழ்ச்சியாக மாறியது.

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.