செரீனா வில்லியம்ஸ் தாயான பிறகு மீண்டும் டென்னிஸ் விளையாட வந்தார். அப்போது அவரால் வெற்றிப் பெற முடியுமா என்று பலரும் சந்தேகித்தனர்.
யாரும் உங்களை நம்ப வில்லை என்றாலும் உங்கள் மேல் நீங்கள் முழு நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற செரீனா, அதை தன் விளையாட்டில் வெளிப்படுத்தி இப்போதும் வெற்றி வாகை சூடி வருகிறார்.
செரீனாவின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக் கொள்ள எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.
நமக்கு ஒரு துறையின் மேலே ஆர்வம் இருந்தால், அந்த வசதி இல்லை, இது இல்லை என குறைப்பட்டுக் கொண்டிருக்காமல், இருப்பதை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது சிறப்பு.
நம்மைப் பற்றி, அதிலும் குறிப்பாக பெண்கள் என்றால் முகம், உடல், அழகு பற்றி மற்றவர்கள் கூறும் கமென்ட்டுகளை ஒதுக்கித் தள்ள பழகிக் கொள்ளுங்கள். நம் மேல் அக்கறை / அன்பு வைதிருப்பவர்கள் யாருமே நம்மை குறைத்தோ, நம் மனம் வருத்தப் படுவதுப் போலவோ பேச மாட்டார்கள் என்பதை உணருங்கள்.
இது எல்லாம் யாரும் செய்தது இல்லை, செய்ய முடியாது என்று மற்றவர்கள் சொல்வதற்காக மனதை தளர விடாதீர்கள்! உங்கள் இலக்கு எதுவோ அதை நோக்கி முழு மனதுடன் பயணம் செல்லுங்கள்! வெற்றி உங்களுக்கே.