(Reading time: 14 - 27 minutes)

அவர் பேசி முடித்ததும், “அவ அப்படி தூக்க மாத்திரை சாப்பிடுற பொண்ணு இல்ல டாக்டர்” என்று கௌசல்யா கூற “மே பீ அவங்களுக்கு தெரியாம கூட யாரவது அவங்களுக்கு குடுத்து இருக்கலாம்…..” என்று சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தார். இது எப்படி நடந்திருக்கும் என்று யோசனையில் இருக்க சட்டென ஒரு பொறி தட்டியது.

 

போட்டியில் பங்குபெறுபவர்களின் களைப்பை போக்க அவர்களுக்கு கொடுக்க சொல்லியதாய் ஒரு ஜூஸுடன் தன்முன் வந்து நின்ற நிகாரிக்கவை ஏனோ அந்த நொடி கௌசல்யா சந்தேகிக்கவில்லை. இப்பொழுது அனைத்தும் அவளுக்கு புரிந்துவிட அடுத்த அரைமணிநேரத்தில் நிகாரிக்காவின் முன் நின்றிருந்தாள் கௌசல்யா.

 

“நீ தான யாழ்க்கு தூக்க மாத்திரை கலந்து கொடுத்த???” என்று கேட்டுக்கொண்டிருந்தாள். அவளது முகம் காளியின் கோபத்தை தத்து எடுத்திருந்தது. நிகாரிக்கா பெங்களூருவை பூர்விகமாக கொண்டதால் தமிழை புரிந்துக்கொண்டு ஓரளவு தமிழில் பேசுவாள். “யெஸ் நான் தான் குடுத்தேன். உன்னால என்னை என்ன பண்ணிட முடியும்” என்று கேட்ட நிகாவின் கழுத்தை கொலை செய்யும் ஆத்திரத்தோடு நெறிக்க துவங்கியிருந்தாள் கௌசல்யா.

 

(மகிழ்ந்திரு)

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.