(Reading time: 9 - 18 minutes)

பாடல் வந்த திசையில் பார்க்க அவளின் பின்னால்  நந்தன் அவளுக்காக கண்களில் காதலை தேக்கி வைத்து பாடியபடியே அவளை நோக்கி வந்துகொண்டிருந்தான். 

 

"வேறதுவும் தேவை இல்லை

நீ மட்டும் போதும்

கண்ணில் வைத்து காத்திருப்பேன்

என்னவானாலும்

 

உன் எதிரில் நான் இருக்கும்

ஒவ்வொரு நாளும்

உச்சி முதல் பாதம் வரை

வீசுது வாசம்

 

தினமும் ஆயிரம் முறை

பார்த்து முடித்தாலும்

இன்னும் பார்த்திட சொல்லி

பாழும் மனம் ஏங்கும்."

 

பாடலை நிறுத்தியதும் அவளிடம்  தன் இடது கையை நீட்டினான். அதில் "நேனு நின்னு ப்ரேமிச்டுனானு" (தெலுங்கு) என எழுதி இருந்தது. மீண்டும் 

 

"தாரமே தாரமே வா

வாழ்வின் வாசமே வாசமே

நீ தானே தாரமே தாரமே வா

எந்தன் சுவாசமே சுவாசமே

நீ உயிரே வா

 

மேலும் கீழும் ஆடும் உந்தன்

மாய கண்ணாலே

மாறுவேடம் போடுது என் நாட்கள்

தன்னாலே

 

ஆயுள் ரேகை முழுவதுமாய்

தேயும் முன்னாலே

ஆளும் வரை வாழ்ந்திடலாம்

காதலின் உள்ளே

 

இந்த உலகம் தூளாய்

உடைந்து போனாலும்

அதன் ஒரு துகளில்

உன்னை கரை சேர்ப்பேன்"

 

 

என பாடியபடியே அவளை கைபிடித்து  முன்னே நடந்தான். பாடலை நிறுத்தியவன் அவளிடம் வலது கையை நீட்ட அதில் "நான் நின்னே ச்னேஹிக்குன்னு" (மலையாளம்)

என எழுதப்பட்டிருந்தது. இதுவரை வந்த புரியாத வார்த்தைகள் அனைத்திற்கும் விளக்கம் என்ன என்பது கொஞ்சம் பிரியவிற்கு விளங்கியது. யாரும் செல்லாத உலகில் சிறகை விரித்து பறந்துக்கொண்டிருந்தாள் பிரியா. அவளது முகத்தில் ஆனந்தம் தாண்டவமாடியது. தன்னை போல மகிழ்ச்சியான ஒருவர் இவ்வுலகில் யாருமே இல்லை என்ற நிலையில் கண்களில் தேங்கிய நீருடன் நந்தனுடன் நின்றுகொண்டிருந்தாள்.

 

 

 

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.