Comedy Stories - மனைவிக்கு பிறந்தநாள் பரிசு.
கணவன் படுக்கையில் அமர்ந்து மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
மனைவியோ அவனை கவனிக்காமல் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மனைவியுடைய பிறந்த நாளுக்கு கொஞ்ச நாட்கள் தான் இருக்கிறது என்பது நினைவுக்கு வரவும், அவள் பிறந்தநாளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான் கணவன்.
“நான் திரும்ப ஏழாக முடிஞ்சா நல்லா இருக்கும்” என்றாள் மனைவி இப்போதும் கண்ணாடியையே பார்த்துக் கொண்டு.
மனைவியுடைய பிறந்தநாள் அன்று காலையில் சீக்கிரமாக எழுந்துக் கொண்ட கணவன், அவளுக்கு சிறு வயதில் பிடிக்கும் என்று சொன்ன உணவுகளை ஸ்பெஷலாக தயார் செய்துக் கொடுத்தான். ஒரு பெரிய சாக்லேட் கேக்கை கூட பரிசளித்தான்.
அத்தோடு நிறுத்தாமல் அவளுக்கு பிடித்த தீம் பார்க்கிற்கு அழைத்துச் சென்றான்.
இருவரும் அங்கே இருந்த விதவிதமான ரைட்களில் எல்லாம் சென்றார்கள்.
ஐந்து மணி நேரம் கழித்து அவர்கள் தீம் பார்க்கில் இருந்து தடுமாறி வெளியே வந்தனர். பல வருடங்கள் கழித்து ரைடுகளில் சென்றதால் அவளுக்கு உலகமே சுழன்றுக் கொண்டிருந்தது.
அத்தோடு நிறுத்தாமல் அவளுக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்தான். ஹோட்டலில் இருந்து மசாலா தோசை வாங்கினான். சாக்லேட் மில்க் ஷேக், ஐஸ்க்ரீம் என அனைத்தையும் அவளுக்கு கொடுத்தான்.
பின்னர் இருவரும் தியேட்டருக்கு சென்று பாப்கார்ன், ஜூஸ் துணையுடன் படம் பார்த்தார்கள். பெரிய சாக்லேட் பார் கூட வாங்கிக் கொடுத்தான்!
இறுதியாக கணவனுடன் வீடு திரும்பிய மனைவி களைப்புடன் படுக்கையில் சரிந்தாள்.
கணவன் ஒரு பெரிய புன்னகையுடன் தன் மனைவியை அணைத்துக் கொண்டே, “டார்லிங் திரும்ப ஏழு வயசாகுற அட்வென்ச்சர் எப்படி இருந்தது?” என பெருமையுடன் கேட்டான்.
மனைவி மெல்ல கண்கள் திறந்துப் பார்த்தாள். அவளுக்கு இப்போது தான் நடப்பது புரிந்தது!!!
“அட லூஸு புருஷா, நான் சொன்னது என்னோட ட்ரெஸ் சைசை!!!!!”
இதுல இருந்து என்ன புரியுது?
கணவன் மனைவி சொல்வதை கவனித்தாலும் கூட, தவறாக தான் புரிந்துக் கொள்வான்.
😂😂😂😂
😀😀😀😀😀