Page 3 of 3
மாத்திரத்தில் கமலாவின் உடல் பதறியது.
மாசிலாமணி பதில் குரல் தராதது கண்டு அடுத்தாற்போல் கல்யாணம், "கமலா!" என்று அழைத்தபடி முற்றத்தைத் தாண்டி வந்தான்.
'கமலா' என்று அவன் அழைப்பது கேட்டதோ இல்லையோ, இவள் மேனியின் மயிர்க் கால்களெல்லாம் லட்சோப லட்சம் குரல்கள் - கல்யாணத்தின் குரல்கள் - 'கமலா' என்று அன்பும் உரிமையும் ததும்ப அழைக்கும் குரல்கள் - புகுந்தன. அந்த இன்ப ஹிம்சையைத் தாள முடியாமல் அவள் நடுங்கினாள். முதலில் ஏற்பட்ட கூச்ச பயம் அடுத்து உண்டான இன்ப வேதனை இரண்டும் அவளை உலுக்கி எடுத்து உள்ளே தள்ளி விட்டன!
கமலா கிணற்றுக்குள் 'தொபீர்' என்று விழுந்தாள். "ஐயோ!" என்று அவள் அலறுவது அதற்கு முன்பாகவே கேட்டது. அப்புறம் நிசப்தம்தான் !
----------------
தொடரும்...