நர்மதா சோகமாகச் சிரித்தாள். மிளகாய் சட்டினி, தொக்குஎல்லாம் பரிமாறினாள்.
"பூரணி அக்காவுக்காக எங்க நாத்தனார் பண்ணி அனுப் பினது. மசக்கையோன்னோ "
இவளுடைய வெகுளித்தனம் ஊரில் சாயிராமுக்குப்பிடித் திருந்தது. இப்போது பாலுவுக்குப்பிடிக்க ஆரம்பித்திருந்தது.
''உனக்கும் கூடிய சீக்கிரம் மசக்கை வரணும்னு ஆசீர் வாதம் பண்ணவா? இல்லை லேட்டா வரணும்னு ஏதாவது ஃபாமிலி ப்ளானிங்லே இறங்கி இருக்கீங்களா?" என்று துணிச் சலாகக் கேட்டான் பாலு.
நர்மதாவுக்கு வாயைவிட்டு வென்று அழவேண்டும் போல இருந்தது. எப்பவுமே ஃபாமிலி ப்ளானிங்தான்னு கத்தவேண்டும் போல இருந்தது. வெட்கமாக இருந்தது. வேதனையாக இருந்தது. சில விஷயங்கள் நெஞ்சுக்குள்ளே அகப்பட்டுக்கொண்டு வெளியே வரமுடியாமல் முரண்டு பண் ணும். இந்த விஷயம் அடி வயிற்றிலேயே புகுந்து கொண்டு கிடந்தது.
பூரணி 'ஹோவ்' என்று கொட்டாவி விட்டாள். விரல் களைச்சொடுக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். பெண் களுக்கு மசக்கை வந்து விட்டால் புருஷனைக் கவனிப்பது குறைந்துவிடும். வயிற்றில் வளரும் சிசுவின்மீதே ஞாபகம். ஆணா, பெண்ணா, கருப்பா சிவப்பா? ரொம்ப வலிக்குமா? கத்த வேண்டியிருக்குமா? என்று பல கேள்விகள். ஆராய்ச்சிகளில் நினைவு மோதிக்கொண்டிருக்கும்.
"சாப்பிட்டாச்சா?" என்று கணவனைக் கேட்டாள்.
'ஓ! உன் சிநேகிதி பரிஞ்சு பரிஞ்சு சாதம் போட்டாள்"
'அப்படியாடி? எனக்கும் கையிலே பிசைந்து போடேன்'
நர்மதாவும், பூரணியும் சாப்பிட்டார்கள்"